Tuesday, September 23, 2014

நல்ல வழி !

Tamil-Daily-News-Paper_80376398564_zps15f1b712

என் கஷ்டங்களும் பிரச்சினைகளும் தீர நல்ல வழி ஒன்றை சொல்லுங்களேன்?

(எஸ். ஜமுனா, சென்னைடூ42)

செலவில்லாமல் நாமஸ்மரணை செய்துவிட்டு அமர்ந்திருங்கள். பகவான் பார்த்துக் கொள்வான் என்று எளிய பரிகாரம் சொன்னால் கேட்கமாட்டார்கள். பரிகாரம் என்ற பெயரில் பல லட்சங்களை கறந்து கொள்ளுங்கள் என்று வழிப்பறிக்காரர்களைக் கூப்பிட்டு கதவை திறந்துவிடுவார்கள். நீங்கள் நாமஸ்மரணை செய்யுங்கள் போதும். பிரச்சினை, கஷ்டம் தீர்த்து, மோட்சம் அளிப்பதில் கலியுகத்தில் இதைவிடச் சிறந்த பரிகார வழி வேறு எதுவும் கிடையாது.

வியாச பகவான் சொன்னார்: “கலி காலத்தில் பிறக்கப் போகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பகவானின் நாமஸ்மரணையை மட்டுமே செய்தால் போதும், முக்தி பெற்றுவிடுவார்கள்!” என்று. அவர் வாழ்ந்த யுகத்தில் தவம் செய்தாக வேண்டும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...