நம் சமயத்தின் சிறப்பு என்ன?
(கே. பிரசன்னா, சென்னை - 106)
முதலும், முடிவுமற்ற - சாசுவதமான சமயம் என்று சொல்லும் அளவுக்கு சிறப்பான வாழ்வியல் கோட்பாடுகளின் அடைப்படையில் உருவானது நமது சமயம். எது நன்மை, எது தீமை என்றெல்லாம் பகுத்துப் பார்க்கிற உணர்வுகளால் நமது சமயம் உருவாக்கப்பட்டு, விதிகளாக எழுதப்பட்டு காலம் காலமாகப் பின்பற்றப் பட்டு வருகிறது.
யாரோ ஒருவர் உருவாக்கிய கோட்பாட்டினால் அவரை அடிப்படையாகக் கொண்டு உருவானதல்ல நம் சமயம். நமக்கு கோட்பாடுகள்தான் முக்கியமே தவிர, அந்தக் கோட்பாட்டை உருவாக்கியவர் அல்லர்.
வாழ்வியல் கோட்பாடுகளாகப் பார்ப்பதால்தான் ராமன், கிருஷ்ணன், புத்தர், இயேசு, சாயி பாபா, அம்மா என எத்தனை பேர் வந்தாலும் அவர்களின் வாழ்வியல் கோட்பாடுகளை மட்டும் எடுத்துக்கொண்டு உங்களால் அனைவரையும் சமமாகப்பார்க்க முடிகிறது.
No comments:
Post a Comment