Thursday, September 25, 2014

சாயி புத்ரன் பதில்கள்

sai59

குருவை எப்போது வணங்க வேண்டும்?  எப்படி வணங்கவேண்டும்?

( கே. ராமலிங்கம், மாமல்லபுரம்)

குருவை பக்தி வந்த பிறகு வணங்க வேண்டும். பக்தி வராமல் ஒருவரை குருவாக வணங்கும்போது அவர் மீது சந்தேகம் வந்துவிடும். பக்தி வந்த பிறகு வணங்கினால் குருவின் மீது சந்தேகம் எழாது. குருவை கடவுளாக நினைத்து வணங்க வேண்டும்.

meekkudi

இப்போதெல்லாம் பாபாவை ஈக்கள் போல மக்கள் மொய்க்க ஆரம்பித்துவிட்டார்களே!  எப்படி?

(ஏ. அன்பு மணி, பெங்களூர்)

பாபா செய்யும் அற்புதங்கள்தான் காரணம். ஆனால் எல்லோருக்கும் பலன் கிடைப்பதில்லை. காரணம், பலர் ஈக்கள் போல இருக்கிறார்களே தவிர, தேனீக்கள் போல இருப்பதில்லை. ஈக்கள் நல்லதிலும் கெட்டதிலும் வாயை வைக்கும். தேனீ போல நல்லதில் மட்டும் வாயை வைக்கும் நம்பிக்கையாளர்களுக்கு பக்கத்தில் இருந்து உதவி செய்கிறார்.

sairam

ஞானசக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி என்ற சக்திகளைப் பற்றி சொல்லுங்களேன்?

(ஆர். பிரபு, கடலூர்)

கண்டவுடன் அறிந்துகொள்ளுதல், ஞான சக்தி, அறிந்து கொண்ட பொருளை அடைய விரும்புவது இச்சா சக்தி.  அதனைஅடைய வேண்டிய முயற்சிகளை செய்வது கிரியா சக்தி.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...