Monday, September 29, 2014

சத்குரு சாயியின் உத்தம பக்தர்கள்!

sai59

மனித வாழ்வில் கஷ்டங்களும் பிரச்சினைகளும் தொடர்கதை. மனிதன் ஆழ்ந்து ஆராய்ந்து அவற்றை குறைக்கவோ, போக்கவோ முடியும். கஷ்டங்களைப்போக்க எளிய வழி மகான்களை பற்றிக்கொள்வது. இதனினும் எளிது மகான்களுக்கு எல்லாம் மகானான பாபாவின் பாதங்களைப்பற்றிக் கொள்வது.



சீரடிக்குச் சென்றேன், என் கஷ்டம் தீரவில்லை. உடல் நலமில்லாமல் போய்விட்டது. நகை திருடுபோய்விட்டது. பணத்தைப்பறிகொடுத்தேன். பாபாவை தினமும் வணங்குகிறேன், நினைப்பது நடக்கவில்லை.



இப்படி நிறைய புலம்பல்கள்.. ஒரு காலக்கட்டத் தில் நிறைய பரிகாரம் என்ற பெயரில் பணச் செலவு. அலைச்சல்.. எதுவும் எடுபடுவதில்லை.



இவற்றுக்கு என்னதான் தீர்வு? என ஆழ்ந்து யோசித்தபோது, பாபா வாழ்ந்தபோது அவரிடம் அன்பு கொண்டு பழகிய பக்தர்களின் வாழ்வைப்படிக்க நேர்ந்தது.



அவர்களின் வாழ்க்கையும் அவர்களுக்கு பாபாவின் உபதேசமும், வழிகாட்டுதலும், அவர்களின் சேவையும் எல்லா பிரச்சினை களுக்கும் ஒளி விளக்காக இருந்தது.



அதையே நாம் பின்பற்றினால் நிச்சயம் விடுதலை பெறலாம்.



அதற்காக சாயி பக்தர்களின் வாழ்க்கை வரலாறுகளை இனி தொடர்ந்து படிக்கலாம்.



 



கு. இராமச்சந்திரன்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...