Sunday, May 28, 2017

பாபாவின் உறுதிமொழிகள்!


• என் வழியில் நீ வந்தால், உனக்கு எல்லா வழியையும் திறந்து விடுவேன்

• எனக்காக நீ சிறிது நேரத்தை ஒதுக்கினால், உனக்கு குபேரனுடைய பொக்கிஷத்தைப்போன்றதை தருவேன்

• என்னால் நீ பழிச்சொல்லை ஏற்றால், உனக்கு பூரண அருள் கிடைக்கும்

• நீ என்னிடம் வந்தால், உன்னை நான் பாதுகாப்பேன்

• என்னைப் பற்றி நீ மற்றவர்களிடம் கூறிக்கொண்டே இருந்தால், உன்னை விலை மதிப்பற்றவனாக்கிவிடுவேன்

• நீ என்னைப் பற்றி நினைத்துக் கொண்டு இருந்தால், உன்னை ரத்னம் போன்று ஜொலிக்கும் ஆன்மீக ஞானம் உள்ளவனாக மாற்றுவேன்

• என் உதவியை நாடி வந்து என்னையே ஏற்றால், உன்னை அடிமைத்தனத்தில்
இருந்து மீட்பேன்

• எனக்காக உன்னை எந்த விதத்திலாவது நீ தந்துவிட்டால், உன்னை
விலை மதிப்பற்றவனாக்கி விடுவேன்

• என் வழியில் நீ நடந்தால், நீ பெரும் புகழ் பெறுவாய் .

• என்னைப்பற்றி பாடிக்கொண்டே இருந்தால், இந்த உலகையே நீ மறந்துவிடுவாய் .

• நீ என்னுடையவன் என ஆகிவிட்டால், அனைவரும் உன்னுடயவர்களாகி
விடுவார்கள்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...