Thursday, July 2, 2015

பிள்ளைகள் நன்றாக வளர வழி!

பிள்ளையை நன்றாக வளர்க்கவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது. பாபா அருளால் எப்படி வளர்த்தால் நன்றாக வளரும்?
(கே. விஜயலட்சுமி, சென்னை - 42)
அனுசுயா அத்ரி குமாரர்கள் துர்வாசர், சோமன், தத்தர் ஆகியோர். முனிவர்களின் பிள்ளைகளான இவர்கள் ஆசிரமத்தில் வளர்க்கப்பட்டவர்கள்.
துர்வாசர் முன் கோபி. முன்பின் யோசிக்க இயலாதவர். சோமன் என்ற மகன் மாற்றான் மனைவி மீது ஆசைப்பட்டவன். தத்தர் எப்போதும் கள் மொந்தையோடு திரிந்தவர்.
என் பிள்ளைகள் உருப்படாது என்று அந்த அம்மையார் நினைக்கவில்லை. என் பிள்ளைகள் தெய்வங்கள் என நினைத்தார். அவர் நினைப்பின் படியே அவர்கள் ஆனார்கள். சோமன் (சந்திரன்) கிரகமானான். தத்தர் குருவானார். துர்வாசர் மிகப்பெரிய ரிஷியானார்.
பாபா கொடுத்த என் பிள்ளை உருப்படும் என நினையுங்கள், நிச்சயம் எதிர்காலத்தில் பிள்ளை சிறந்து விளங்குவான். சிறப்பு வளர்ப்பு எதுவும் தேவைப்படாது.


No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...