Thursday, January 31, 2013

என் வாக்குகள் பொய்யாவதில்லை


என் வாக்குகள் பொய்யாவதில்லை

ஸ்ரீ சாயியின் அமுத மொழிகளை விடாமல் நினைவு கூர்ந்து நாமஸ்மரணை செய்வீர்களேயானால் உங்களது மனதை வருத்தும் கவலைகள், அல்லல் மற்றும் அவஸ்தைகள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும் என்பது சத்தியமான உண்மை. சதாசர்வகாலமும் சாயி சாயி என்று உச்சரித்து அவரது திருவடிகளை பரிபூரணமாக சரணடையுங்கள், நினைத்தது நிறைவேறும் இனி அவரது வாக்குறுதிகளை தினம் ஒன்றாக இங்கே பார்க்கலாம்.

என்னிடம் உள்ளத்தையும் உயிரையும் ஒப்புவித்த அடியார்கள் என் லீலைகளைக் கேட்டதும் இயற்கையிலேயே மகிழ்வெய்துவர்.

 ஸ்ரீ சாயியின் வாக்குறுதிகள் சத்தியமானவை, அவைகளை முழு மனதோடு நம்பிப் பொறுமையாக பின்பற்றினால் எல்லா நலனும் பெறுவீர்கள்,  இந்த ஆண்டு முதல் உங்கள் வாழ்க்கை வளமாவதற்க்கு நீங்கள் இந்த வாக்குறுதிகளை உங்களுக்கு உரியதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஜெயிப்பீர்கள்.

ஜெய் சாய்ராம்

Wednesday, January 30, 2013

என் வாக்குகள் பொய்யாவதில்லை


என் வாக்குகள் பொய்யாவதில்லை

ஸ்ரீ சாயியின் அமுத மொழிகளை விடாமல் நினைவு கூர்ந்து நாமஸ்மரணை செய்வீர்களேயானால் உங்களது மனதை வருத்தும் கவலைகள், அல்லல் மற்றும் அவஸ்தைகள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும் என்பது சத்தியமான உண்மை. சதாசர்வகாலமும் சாயி சாயி என்று உச்சரித்து அவரது திருவடிகளை பரிபூரணமாக சரணடையுங்கள், நினைத்தது நிறைவேறும் இனி அவரது வாக்குறுதிகளை தினம் ஒன்றாக இங்கே பார்க்கலாம்.

என் வாழ்க்கையையும் செயல்களையும் ஊக்கமுடன் இசையாகப் பாடுவானாயின் அவனுக்கு முன்னும் பின்னும் எல்லா திக்குகளிலும் சூழ்ந்திருப்பேன்.

 ஸ்ரீ சாயியின் வாக்குறுதிகள் சத்தியமானவை, அவைகளை முழு மனதோடு நம்பிப் பொறுமையாக பின்பற்றினால் எல்லா நலனும் பெறுவீர்கள்,  இந்த ஆண்டு முதல் உங்கள் வாழ்க்கை வளமாவதற்க்கு நீங்கள் இந்த வாக்குறுதிகளை உங்களுக்கு உரியதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஜெயிப்பீர்கள்.

ஜெய் சாய்ராம்

Tuesday, January 29, 2013

என் வாக்குகள் பொய்யாவதில்லை


என் வாக்குகள் பொய்யாவதில்லை

ஸ்ரீ சாயியின் அமுத மொழிகளை விடாமல் நினைவு கூர்ந்து நாமஸ்மரணை செய்வீர்களேயானால் உங்களது மனதை வருத்தும் கவலைகள், அல்லல் மற்றும் அவஸ்தைகள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும் என்பது சத்தியமான உண்மை. சதாசர்வகாலமும் சாயி சாயி என்று உச்சரித்து அவரது திருவடிகளை பரிபூரணமாக சரணடையுங்கள், நினைத்தது நிறைவேறும் இனி அவரது வாக்குறுதிகளை தினம் ஒன்றாக இங்கே பார்க்கலாம்.

என்னுடைய லீலைகளின் ஆழத்தில் ஒருவன் முழுகுவானானால் அவன் ஞானமென்னும் விலை மதிப்பில்லாத முத்துக்களை பெறுவான். 

 ஸ்ரீ சாயியின் வாக்குறுதிகள் சத்தியமானவை, அவைகளை முழு மனதோடு நம்பிப் பொறுமையாக பின்பற்றினால் எல்லா நலனும் பெறுவீர்கள்,  இந்த ஆண்டு முதல் உங்கள் வாழ்க்கை வளமாவதற்க்கு நீங்கள் இந்த வாக்குறுதிகளை உங்களுக்கு உரியதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஜெயிப்பீர்கள்

ஜெய் சாய்ராம்

Monday, January 28, 2013

என் வாக்குகள் பொய்யாவதில்லை


என் வாக்குகள் பொய்யாவதில்லை

ஸ்ரீ சாயியின் அமுத மொழிகளை விடாமல் நினைவு கூர்ந்து நாமஸ்மரணை செய்வீர்களேயானால் உங்களது மனதை வருத்தும் கவலைகள், அல்லல் மற்றும் அவஸ்தைகள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும் என்பது சத்தியமான உண்மை. சதாசர்வகாலமும் சாயி சாயி என்று உச்சரித்து அவரது திருவடிகளை பரிபூரணமாக சரணடையுங்கள், நினைத்தது நிறைவேறும் இனி அவரது வாக்குறுதிகளை தினம் ஒன்றாக இங்கே பார்க்கலாம்.

என்னுடைய லீலைகள் கவனத்துடனும், பக்தியுடனும் கேட்கப்படுமாதலால் இவ்வுலக வாழ்க்கையின் உணர்வு தணிந்து பக்தி, அன்பு ஆகியவற்றின் வலிமையுடன் அலைகள் மேல் எழும்பும்

 ஸ்ரீ சாயியின் வாக்குறுதிகள் சத்தியமானவை, அவைகளை முழு மனதோடு நம்பிப் பொறுமையாக பின்பற்றினால் எல்லா நலனும் பெறுவீர்கள்,  இந்த ஆண்டு முதல் உங்கள் வாழ்க்கை வளமாவதற்க்கு நீங்கள் இந்த வாக்குறுதிகளை உங்களுக்கு உரியதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஜெயிப்பீர்கள்

ஜெய் சாய்ராம்

பாபாவிற்க்கு ரதம் கொடுத்த பக்தர்



தர்ம தேவனான பாபாவின் உபதேசங்கள் சகலருக்கும் பொருந்தும்,  ஆகையால் அவரை தரிசிக்க உலகின் பல பாகங்களில் இருந்தும் ஜாதி மத பேதமில்லாமல் வந்து செல்கிறார்கள்.  பாபா யாரை எப்போது தன் பக்கம் இழுக்கிறார் என்பது யாருடைய புத்திக்கும் எட்டாதது.

     கர்னாடக மாநிலம் பெல்லாரியில் வசிக்கும் முகம்மது ரபீக் என்ற பக்தரை சாயி எப்படி தன் பக்கம் இழுத்தார் என்பதைப் பார்ப்போம்.

     பாபா மீதுள்ள பக்தியின் காரணமாக இருபது ஆண்டுகளாக சீரடிக்குப் பலமுறை வந்திருப்பவர் முகம்மது ரபீக். கடந்த வருடம் சீரடியில் லெண்டி பாக் அருகேயுள்ள நந்தா தீப் அருகே பெங்களூரைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரைச் சந்தித்தார்.  இருவரும் ஆரத்தி நேரத்தில் பாபாவை தரிசிக்கச் சென்றனர்.  பாபாவைத் தரிசித்துப் பக்திப் பரவசத்தில் மூழ்கிய ரபீக், பாபாவிற்க்கு எதையேனும் செய்ய வேண்டும் என விருப்பம் கொண்டுவிட்டார்.

     என்ன செய்யலாம் என யோசித்து பாபாவுக்கு பூக்கூடை ஒன்றை வாங்கித் தர முடிவு செய்து 28 கிலோ எடையுள்ள பூக்கூடையை வெள்ளியில் தயார் செய்து கொடுத்தார்.  அவர் வீடு திரும்பியதும் அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.   மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டிருப்பது தெரிந்தது.  இது பாபாவின் மகிமை என உணர்ந்து மேலும் பாபா மீது பக்தியுள்ளவரானார்.

     தலைவராகப் பொறுப்பேற்றதும் சன்ஸ்தானுக்கு மீண்டும் ஏதாவது காணிக்கை தரவேண்டும் என்ற ஆவல் எழுந்தது.  அதை சீரடி சன்ஸ்தான் உறுப்பினரான ஏக்நாத் கோந்த்கர் என்பவரிடம் தெரிவித்தார்.  அவர், வெள்ளியிலான ரதம் ஒன்றினை காணிக்கையாகத் தரலாம் என்றார். ஏக்நாத் மற்றும் சீரடி விஸ்வஸ்த மண்டலியின் அறிவுரைப்படி ரபீக் வெள்ளியிலான ரதம் ஒன்றை தயார் செய்தார்.

     அந்த ரதமானது புகழ் பெற்ற ப்ரவீண் மற்றும் இருபது பேர் கொண்ட குழுவினரால் செய்யப்பட்டது.  திருப்பதி, காளஹஸ்தி மற்றும் பெல்லாரி துர்கை அம்மன் கோயில்களுக்கு ரதம் செய்து தந்து சிறப்புப் பெற்றவர் ப்ரவீண்.  இவரது உருவாக்கத்தில் 230 கிலோ வெள்ளியில் 40 லட்ச ரூபாய் செலவில் இந்த ரதம் உருவானது.  இதைப் பார்த்த ரபீக்கின் நண்பர் விஜயகுமார் அவர்கள் மனதில் இதற்க்கு தங்க முலாம் பூசலாமே என்று சிந்தித்தார்.  தனது நண்பர் அஜய் குப்தாவுடன் சேர்ந்து எட்டு லட்ச ரூபாய் செலவில் தங்க முலாம் பூசச் செய்தார்.

     இப்படி வெள்ளியிலான ரதம் தங்கப் பூச்சுடன் சீரடியில் ராமநவமி, கோகுலாஷ்டமி, குரு பூர்ணிமா, ரங்க பஞ்சமி, வருடப் பிறப்பு, தத்த ஜயந்தி, விஜயதசமி போன்ற விசேஷ நாட்களில் வலம் வருகிறது.

     இந்த ரதத்தில் பாபாவின் பாதுகைகள், சட்கா, பாபாவின் மூல உருவப்படம் ஆகியவை வைக்கப்பட்டு பெல்லாரியிலிருந்து ஊர்வலமாக 2010 ம் ஆண்டு குரு பூர்ணிமா தினத்தில் சீரடிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

     முஸ்லிம் இனத்தவரால் கொடுக்கப்பட்ட இந்த காணிக்கையானது சீரடி சன்ஸ்தானின் வரலாற்றில் இதுவே பெரியதாகும். இந்த முஸ்லிம் பக்தன் செய்த சேவையை மகாராஷ்டிர மாநிலத்தின் மந்திரி ராதா கிருஷ்ண வி கே பாடீல், தலைவர் ஜயந்த சாசணெ, உப தலைவர் கிசோர் மோரே, உதவி எக்ஸிகியீட்டிவ் அலுவலர் யஷ்வந்த்ராவ் மானே ஆகியோர் பாராட்டி நன்றி கூறினார்கள்.

நன்றி:  சாயிலீலா
தமிழில்:  வெங்கட்ராயன், ஊத்துக்கோட்டை

Sunday, January 27, 2013

வள்ளலார் நிகழ்த்திய அருள் அற்புதம்




மழையில் தழைப்பது பயிர்கள் – இறைவன் அருளில் தழைக்குது உயிர்கள்

     ஆம். இறைவனுடைய அருளின்றி ஓர் அணுவும் அசையாது.  இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களிடத்தே அன்பு எனும் நீர் பாய்ச்சி கருணை எனும் உரமிட்டு அருள் எனும் ஞானப்பயிரை வளர்த்தவர் வள்ளற்பெருமான் ஆவார்.  உயிர் இரக்கமே, என் உயிர் என்றும் மண்ணுயிர் எல்லாம் கடவுள் வடிவம் என்றும் அவர் நினைத்து வாழ்ந்த காரணத்தினாலேயே சுத்த தேகம், ஞான தேகம், பிராண தேகம் என்னும் முத்தேக சித்தி பெற்றார்.  இறையருளால் தம் உடலை பொன்னுடலாகவும், ஒளியுடலாகவும் பெற்றுக்கொண்டார். அதோடு அட்ட சித்திகளையும் கைவரப் பெற்றார்.  இறந்தாரை  எழுப்புவித்தல் என்னும் சித்தாடலைத் தவிர ஏனைய சித்தாடல்கள் வள்ளற்பெருமான் அவர்களால் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருந்தன.

     கூடலூரில் பெரிய செல்வந்தர் ஒருவர் இருந்தார்.  செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல் என்னும் முதுமொழிக்கு இணங்க ஈந்து இசைப்பட வாழாது கருமி என்ற பட்டத்தோடு அவர் வாழ்ந்து வந்தார்.

     அவர் வள்ளற்பெருமானைக் காண அவ்வப்போது வடலூர் வந்து செல்வதுண்டு.  ஒரு நாள் வள்ளற்பெருமானைக் காண வந்த போது, கூட்டத்தின் இடையே எழுந்து தன்னை பிறர் மதிக்கவேண்டும் என்று நினைத்து ஐயா அவர்களைப் பார்த்து ’சுவாமி, தாங்கள் ஒரு முறை எனது இல்லத்திற்க்கு எழுந்தருள வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். இதைப் போன்று அவர் பலமுறை கேட்டதுண்டு. அன்றைய தினம் வள்ளற்பெருமான் அவரை உற்றுப் பார்த்துவிட்டு “பல நாட்களாக நீங்களும் அழைக்கிறீர்கள், சரி, நாளை வருகிறேன்” என்றார்.  செல்வந்தருக்கோ உதறல் ஏற்பட்டது.  ஐயா இப்படிச் சொல்வார் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.  ஐயா அவர்கள் வந்தால் வீண்செலவு ஆகுமே என்ற அச்சம் வேறு ஏற்பட்டது.

     அடுத்த நாள், வள்ளற்பெருமான் செல்வந்தருடைய வீட்டிற்க்கு சென்றார். அவர் வருவதை தூரத்தில் இருந்தே பார்த்த அவர், அவரது மனைவியிடம், ’வடலூர் சாமி வருகிறார், அவர் வந்தால் என் கணவர் வீட்டில் இல்லை வெளியூர் சென்றுவிட்டார் என்று சொல்லிவிடு’ என்று சொல்லிவிட்டு வீட்டின் உள்ளே சென்று மறைந்துகொண்டார். வள்ளற்பெருமான் வீட்டில் அடியெடுத்து வைத்ததும் அவரது மனைவி பெருமானிடம் தனது கணவர் சொன்னபடியே நடந்து கொண்டார். முக்காலமும் உணர்ந்தவர் அல்லவா! நம் பெருமான், இதை அறியாதவரா, என்ன?, நல்லது நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

     வள்ளற்பெருமான் சென்றபின் கணவனும் மனைவியும் நிம்மதிப் பெருமூச்சுடன் கூடத்திற்க்கு வந்தனர். அப்போது ஓர் அதிசயக் காட்சியினை கண்டனர்.  ஐயா அவர்கள் நடந்து வந்த பாதையில் அவர் காலடி பதித்த தடங்களில் எல்லாம் பொன் துகள்கள் பரவிக்கிடந்தன.

தூக்கம் கெடுத்துச் சுகம் கொடுத்தான் எந்தனக்கே
ஆக்கமென ஓங்கும்பொன் அம்பலத்தான் ஏக்கமெலாம்
நீங்கினேன் எண்ணம் நிரம்பினேன் பொன் வடிவம்
தாங்கினேன் சத்தியமாகத்தான்.

     வள்ளற்பெருமான் பொன் வடிவம் தாங்கிய செய்தியினை இப்பாடலே மெய்பிக்கும்.  பொன் வடிவம் பெற்ற ஐயா அவர்களின் பொன்னடிகளில் பொன் துகள்கள் தானே பரவிக்கிடக்கும்!

     பொன் துகள்களை கண்ட செல்வந்தரின் மனைவி வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்து ஒரு பெரிய தாம்பாளத்தினை எடுத்து வந்து அந்த பொன் துகள்களை திரட்ட முற்பட்டார். என்ன ஆச்சரியம்! அனைத்தும் மாயமாய் மறைந்து விட்டன.  கணவனும் மனைவியும் மெய்விதிர்க்க தங்களது தவறான செயலை நினைத்து வருந்தினர்.  ஒரு மகானிடம் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொண்டோ, அறிவிழந்துவிட்டோமே, அளவற்ற செல்வம் இருந்தும் என்ன பயன்? எஞ்ஞான்றும் அழியாத பொன்வடிவம் பெற்ற பேரருளாளர் என்பதை உணராமல் எப்படிப்பட்ட பாவச்செயலினை செய்துவிட்டோம் என்று நினைத்து வருந்தினர்.

     இதைப் போன்று வள்ளற்பெருமானின் திருவருளால் திருந்தி நல்வழிச் சென்றோர் பலருண்டு.  வள்ளற்பெருமானைப் பார்த்தாலும், அவரை நினைத்தாலும் அவர் அருளிய திருவருட்பாவினைப் படித்தாலும், பிறர் படிக்க பக்கம் நின்று கேட்டாலும், மனத்துள் உணர்ந்தாலும் நம்மிடம் உள்ள தீவினைகள் துள்ளி ஓடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

வாழ்க வையகம்!                                வளர்க சன்மார்க்க நெறி!

கட்டுரை ஆசிரியர் திருக்குறள் சுப.வீரபத்திரன், எம்.ஏ., பி.எட்.,
திருவண்ணாமலை
நன்றி: கருணீகமித்திரன் மாத இதழ், டிசம்பர் 2012

Saturday, January 26, 2013

என் வாக்குகள் பொய்யாவதில்லை


என் வாக்குகள் பொய்யாவதில்லை

ஸ்ரீ சாயியின் அமுத மொழிகளை விடாமல் நினைவு கூர்ந்து நாமஸ்மரணை செய்வீர்களேயானால் உங்களது மனதை வருத்தும் கவலைகள், அல்லல் மற்றும் அவஸ்தைகள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும் என்பது சத்தியமான உண்மை. சதாசர்வகாலமும் சாயி சாயி என்று உச்சரித்து அவரது திருவடிகளை பரிபூரணமாக சரணடையுங்கள், நினைத்தது நிறைவேறும் இனி அவரது வாக்குறுதிகளை தினம் ஒன்றாக இங்கே பார்க்கலாம்.

முதலில் பசியோடு இருப்பவர்களுக்கு உணவு கொடுத்து, பின்பு நீ உண்பாயாக

 ஸ்ரீ சாயியின் வாக்குறுதிகள் சத்தியமானவை, அவைகளை முழு மனதோடு நம்பிப் பொறுமையாக பின்பற்றினால் எல்லா நலனும் பெறுவீர்கள்,  இந்த ஆண்டு முதல் உங்கள் வாழ்க்கை வளமாவதற்க்கு நீங்கள் இந்த வாக்குறுதிகளை உங்களுக்கு உரியதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஜெயிப்பீர்கள்

ஜெய் சாய்ராம்

பாபாவின் வார்த்தையும் நோய் தீர்க்கும்!




     பண்டரிபுரம்.  பாண்டுரங்கன் வாழும் திவ்ய ‌ஷேத்திரம். மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் சந்திரபாகா நதிக்கரையில் அமைந்துள்ளது. விட்டோபா ஆலயம் விசேஷ நாட்களில் சுமார் பத்து லட்சம் பேர் வரை தன் பக்கம் இழுத்து  விடும்.  புராண காலத்திலிருந்தே பிரசித்திப் பெற்ற ஸ்தலம் இது.

     13-ம் நூற்றாண்டில் இருந்து 17-ம் நூற்றாண்டு வரை தியானேஸ்வரியை (பகவத் கீதை) எழுதிய தியானேஸ்வர், நாமதேவர், ஏக்நாத், துக்காராம், புரந்தர தாசர், விஜயதாசர், கோபால தாசர், ஜெகன்னாத தாசர் போன்ற பக்தர்கள் பண்டரிபுர விட்டலை வழிபட்டு மேன்மை அடைந்தவர்கள்.


     இப்படிப்பட்ட புண்ணியத்தலத்தில் தாத்யா சாகேப் நூல்கர் நீதிபதியாகப் பணியாற்றி வந்தார்.  வேதங்கள், சாஸ்திரங்களில் நல்ல புலமை உள்ள இவர், தனக்கு குரு தேவையில்லை என்ற எண்ணம் கொண்டவர்.

     அதிகம் படித்தாலே அடக்கத்திற்க்கு பதில் அகங்காரம் வந்துவிடும். அறிவு கூட ஓரளவுக்கு மேல் வளரக்கூடாது போலிருக்கிறது.  ஏனெனில் அது எப்போதும் தர்க்கம் செய்து கொண்டே இருக்கும்.

     சத்சரித்திரம் எழுதிய தாபோல்கரும் சீரடியில் இருந்தபோது இப்படித்தான் குருவின் அவசியம் என்ன என்று கேட்டு பின் பாபாவேலேயே குரு அவசியந்தான் என உணர்த்தப்பட்டார். பாபாவையே குருவாக ஏற்றுக் கொண்டு என்றும் அழியாத சத்சரித்திரத்தை எழுதினார்.

     இந்த நூல்கர் ஒருமுறை ஜல்கான் என்ற ஊருக்குப் பயணம் செய்தார்.  அங்கே அவருக்குத் தாங்கமுடியாத கண் வலி ஏற்பட்டது.

     இவருடைய சகோதரர் ஒரு டாக்டர்.  அவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள நினைத்திருந்த போதிலும், இன்னும் சில நாட்களில் குரு பூர்ணிமா வருவதை நினைவு கூர்ந்து, சிகிச்சை பெறாமலேயே சீரடிக்குச் சென்றுவிட்டார்.

     பாபாவை தரிசிக்கும் முன், சாதேயின் வாதாவில் சற்று நேரம் ஓய்வு எடுத்தார்.  அவரது கண்வலி அதிகமாகிக்கொண்டே வந்தது.  அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பாபாவைத் தரிசிக்க துவாரகாமாயி வந்துவிட்டார்.

     பாபா எப்போதும் போல் சாமாவிடம், “ஷாமா!  என் கண்கள் ரொம்பவும் தொந்தரவு செய்கிறது.  வலி தாங்கமுடியவில்லை” என்றார்.

     இந்த வார்த்தையைச் சொன்னதுமே நூல்கரின் கண் வலி இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.  பாபா தனது நோயினை குறிப்பிட்டே தனக்கு அனுக்கிரகம் செய்தார் என்பதைப் புரிந்துக்கொண்டார் நூல்கர்.

     தனது பணிக்காலம் முடிந்த பிறகு சீரடிக்கு வந்து, தனது இறுதிக்காலம் வரை சீரடியில் பாபாவுடனேயே தங்கிவிட்டார்.  அவர் காலமான அன்று அவருக்கு உதியும் தீர்த்தமும் அனுப்பி, அவரது ஆன்மா சாந்தியடைய அனுக்கிரகம் செய்தார் பாபா.

-    கு ராமச்சந்திரன்

Friday, January 25, 2013

என் வாக்குகள் பொய்யாவதில்லை


என் வாக்குகள் பொய்யாவதில்லை

ஸ்ரீ சாயியின் அமுத மொழிகளை விடாமல் நினைவு கூர்ந்து நாமஸ்மரணை செய்வீர்களேயானால் உங்களது மனதை வருத்தும் கவலைகள், அல்லல் மற்றும் அவஸ்தைகள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும் என்பது சத்தியமான உண்மை. சதாசர்வகாலமும் சாயி சாயி என்று உச்சரித்து அவரது திருவடிகளை பரிபூரணமாக சரணடையுங்கள், நினைத்தது நிறைவேறும் இனி அவரது வாக்குறுதிகளை தினம் ஒன்றாக இங்கே பார்க்கலாம்.

என்னிடம் வருபவன் கடலுடன் ஆறு கலப்பது போல, என்னுடன் இரண்டறக் கலந்து விடுகிறான்.

ஸ்ரீ சாயியின் வாக்குறுதிகள் சத்தியமானவை, அவைகளை முழு மனதோடு நம்பிப் பொறுமையாக பின்பற்றினால் எல்லா நலனும் பெறுவீர்கள்,  இந்த ஆண்டு முதல் உங்கள் வாழ்க்கை வளமாவதற்க்கு நீங்கள் இந்த வாக்குறுதிகளை உங்களுக்கு உரியதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஜெயிப்பீர்கள்

ஜெய் சாய்ராம்

ஸ்ரீ சாயி சரித்ரா


ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றி ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றி
ஸ்ரீ குருமஹராஜனே போற்றி குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.

ஸ்ரீ சத்சரித்ரா தமிழில் படிக்க இங்கு சொடுக்கவும்

சாயியா? சாயிராமா?



‘சாயி என்றுதான் சொல்லவேண்டும்.  ராம் எங்கிருந்து வந்தார்? ஆகவே சாயிராம் என்று சொல்லக்கூடாது. சிலர் தங்களது பெயருக்கு முன்னாலும், பின்னாலும் பாபாவின் பெயரைச் சேர்த்துக்கொண்டு பாபாவை மறைத்து, தன்னை சாயிபாபா என்று சொல்லிக்கொள்ளும் போலிகளை நம்பக்கூடாது. இவர்கள் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியவர்கள்.
இந்த உண்மையினை எடுத்துச் சொல்லவேண்டும், செய்வீர்களா?
(கே.பி.முருகன், மதுரை)


     நம்முடைய வேதங்கள், உபநிஷத்துக்கள், மற்ற வரலாற்று சரித்திரங்கள், பாரம்பரியம் போன்ற எதையும் படிக்காதவர்களாக இருந்தாலும் சத்சரித்திரத்தை முழுமையாகப் படிக்கவேண்டும். படித்ததை சிந்திக்க வேண்டும்.

     பாபா தன்னை பிறரது குருக்களாகவும், பிறரது இஷ்ட தெய்வங்களாகவும் காட்டினார் என்கிறது சத்சரித்திரம்.  சென்னை பஜனை கோஷ்டியில் ஒரு பெண்ணுக்கு ராமராக காட்சியளித்தார் என்றும், இன்னும் சிலருக்கு அவரவர் குருவாக, ஏன் காலம் சென்ற தந்தையாகக் கூட கூறுகிறார்கள்.  இல்லாதவர்களை எப்படி இவரோடு இணைத்துக் கூறுகிறார்கள்?

     விட்டல் நழுவல் பேர்வழி என்று பாபா கூறியிருக்கிறார்.  தத்தர் கோயிலுக்குப் போகாமல் சீரடிக்கு வந்த நானாவை கண்டித்திருக்கிறார்.  தேவிக்கு செய்த நேர்த்திக்கடனை தான் ஏற்க மறுத்து, அங்கேயே சென்று நேர்த்திக்கடனை செலுத்து எனக் கூறினார்.  மாருதியை அல்லா எனக் கூறினார் என அவரது சரித்திரம் கூறுகிறது.

     ராம் என்றால் சரணடைந்தவர்களைக் காப்பவன் என்று பொருள் என்றும், இன்னும் பல பொருட்கள் உள்ளன என்றும் சொல்கிறார்கள்.

     உங்களது பெயர் முருகன்.  முருகன் என்று பெயர் வைத்துக் கொண்டதால் முருகக்கடவுளையே மறைத்து விட்டீர்களா? அல்லது மக்கள் உங்களை முருகக்கடவுள் என்கிறீர்களா? அப்படியே இருந்தாலும் எத்தனை காலத்திற்க்கு மக்கள் உங்களை மனதில் வைத்திருப்பார்கள்? அப்படியிருக்க உங்களுக்கு எதற்காக  முருகன் என்று பெயர் வைத்தார்கள்?

     எப்போதும் இறைவனின் நாமத்தை நாம் உச்சரிக்க வேண்டும் என்ற பொருளில்தான் நமக்குப் பெயர்கள் இடப்படுகின்றன. உலகிலேயே அதிகமாக வைக்கப்பட்டுள்ள பெயர் முகம்மது. இவர்கள் எல்லோரும் நபிகளாகி விடுகிறார்களா? அல்லது நபியினை மறைத்து விட்டு இவர்கள் எழுந்துவிடுகிரார்களா?

     சாயி என்ற சூரியனை யார் உள்ளங்கையால் மறைத்துவிடமுடியும். கண்ணை மூடிக்கொண்டு கடவுளை மறைத்துவிட்டேன் என்று சொல்லமுடியுமா?

     துறவிகளை மகராஜ் என்று அழைப்பார்கள். எனவே அவர்கள் மகராஜாக்கள் என்று அர்த்தமாகிவிடுமா என்ன?

     வடநாட்டில் சாதுக்கள் அனைவரையுமே பாபா என்றுதான் அழைக்கிறார்கள். மெஹர் பாபா, சோட்டே பாபா என பலரை பாபா என்றே அழைக்கிறார்கள். இவர்கள் சாயி பாபாவினை மறைத்துவிட்டார்களா என்ன?

     இதையெல்லாம் யோசிக்கவேண்டும். சடங்குகளைப் பற்றிச் சொல்லித்தருகிற வேதங்கள் கடவுள் உருவமில்லாதவர் என்பதையும், கடவுளும் நாமும் வேறு அல்ல என்றும் சொல்லித் தருகின்றன.

     எல்லாவற்றிலும் என்னைப் பார் என்றுதான் பாபா போதித்திருக்குறார். புலையனும் நானே, நாயும் நானே, நகரும், நகராப் பொருட்கள் அனைத்திலும் நான் வியாபித்துள்ளேன் என அவர் சொல்லியிருப்பதைப் பார்த்தால் எல்லோரும் ஒன்று என உணரலாம்.

     ஒரு மரத்தை அதன் கனிகளால் அறியலாம் என்று கூறுவார்கள். உனது கனிகளால் நீ சாயியின் சாயலை நிரூபித்துக் காட்டு.  சாயி பக்தன் என்று சொல்லிக்கொள்கிற நீ சாயியைப் போல வாழ்ந்துக்காட்டு.

     சத் சரித்திரத்தைக்கூட  சரியாக படிக்காதவர்கள் தன்னை சாயி பக்தர்கள் என்பதும், சாயி பாபாவின் தொண்டர்களைல் போல நடந்து கொள்வதும் பிறரை ஏமாற்றும் வழி. தொழில் நன்றாகப் போகாவிட்டால் பாபாவிடம் வந்துவிடலாம் என்றிருப்பவர்கள்.  இவர்கள் பேசுவதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டு அவர்கள் வழியே நீங்களும் செல்லாதீர்கள். சத்சரித்திரம், உபநிஷத்துக்களைப் படியுங்கள்.

Thursday, January 24, 2013

என் வாக்குகள் பொய்யாவதில்லை


என் வாக்குகள் பொய்யாவதில்லை

ஸ்ரீ சாயியின் அமுத மொழிகளை விடாமல் நினைவு கூர்ந்து நாமஸ்மரணை செய்வீர்களேயானால் உங்களது மனதை வருத்தும் கவலைகள், அல்லல் மற்றும் அவஸ்தைகள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும் என்பது சத்தியமான உண்மை. சதாசர்வகாலமும் சாயி சாயி என்று உச்சரித்து அவரது திருவடிகளை பரிபூரணமாக சரணடையுங்கள், நினைத்தது நிறைவேறும் இனி அவரது வாக்குறுதிகளை தினம் ஒன்றாக இங்கே பார்க்கலாம்.

நான் எப்போதும் உங்களுடனேயே இருக்கிறேன். உங்கள் இதயமே

என் இருப்பிடம்.

 ஸ்ரீ சாயியின் வாக்குறுதிகள் சத்தியமானவை, அவைகளை முழு மனதோடு நம்பிப் பொறுமையாக பின்பற்றினால் எல்லா நலனும் பெறுவீர்கள்,  இந்த ஆண்டு முதல் உங்கள் வாழ்க்கை வளமாவதற்க்கு நீங்கள் இந்த வாக்குறுதிகளை உங்களுக்கு உரியதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஜெயிப்பீர்கள்

ஜெய் சாய்ராம்

ஆத்மார்த்தமான பிரார்த்தனை செய்!



     மும்பையில் பாக் தீவிரவாதிகள் நிகழ்த்திய அட்டூழியத்தில் பல பொன்னான உயிர்கள் பறி போன நிகழ்வுகளின் சுவடுகள் மனதினை விட்டு நீங்காத நிலையிலேயே, கடந்த வருடம் மோசமான நிகழ்வுகளான பூனா பேக்கரி குண்டு வெடிப்பு, குஜராத் தந்தேவாடாவில் நடந்த ஜாதிக்கலவரம், ஏர் இந்தியா விமான விபத்து, ஜாந்த்ராவில் நடந்த கொடூரமான மனித சாவுகள் இவை எல்லாம் என் உள்ளத்தைக் கலக்கியது.

     பலர் தங்களது உறவினர்கள், குடும்பத்தார், நண்பர்களுக்காகத் தவித்துக் கொண்டிருந்த வேளையில் அடுத்து என்ன நேரிடப்போகிறதோ என்று என் உதடுகள் துடித்தன.  இன்று காலையில் பார்த்த எத்தனயோ பேர்களை மாலை பார்க்க முடியுமா என்ற அச்சம் என்னுள் எழுந்தது.  எனக்கு வியர்த்துக் கொட்டியது.

     என்னுடைய பூஜையறையில் பாபாவின் முன்னால் நின்று பாபா இதற்க்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா என்று புலம்பினேன்.

     இப்படிப்பட்ட நிலைமை இருக்கும்போது எப்படி நம்மை நாம் உணர்வது, வாழ்க்கை லட்சியத்தை அடைவது என்பன போன்ற சந்தேகங்கள் என்னுள் எழுந்தன.

     நம் நாட்டின் உயர் மட்ட அதிகாரிகள், ராணுவ வீரர்கள் என எல்லோரும் தமது பணியினை செவ்வனே ஆற்றி வருகிறார்கள். அதே சமயம் வீட்டில் இருக்கும் நாம், நம்மைப் போன்ற நண்பர்கள், உறவினர்கள், வீட்டு மனைவிமார்கள், வயதானவர்கள், இளைஞர்கள் என்ன செய்ய முடிகிறது? நம்மால் ஏதும் செய்ய இயலாதா?

     இப்படி எண்ணிக் கொண்டிருக்கும்போது என்னுடைய மகன் பூட்ஸ் மாட்டிக்கொண்டு கல்லூரிக்குச் சென்றான்.  அவன் நல்லபடியாகத் திரும்பி வர வேண்டும் என்று பாபாவிடம் வேண்டினேன்.  உடனே என்னையறியாமல் இன்னொரு பிரார்த்தனை என் உள்ளத்திலிருந்து வெளியே வந்தது. ‘இந்த உலகத்தில் எந்த இடத்திலிருந்தாவது எந்த ஒரு மனிதனாவது தங்களுடைய வேலைகளை முடித்துக்கொண்டு வீட்டிற்க்கு நலமாக திரும்பவேண்டும்!’ என்று வேண்டினேன்.

     யாருக்கும் எதுவும் நேரிடக்கூடாது, பிரார்த்தனை ஒரு நல்ல வழி என்று உடனேயே பாபா உணர்த்தினார். நமக்காக பிரார்த்தனை செய்யாமல் எல்லோருக்குமாகவும் பிரார்த்தனை செய்யவேண்டும் என்ற அந்த உணர்த்துதல் என்னுள் உதயமானது.  லோகா சமஸ்தா சுகினோபவந்து.

     இப்படியொரு பிரார்த்தனை செய்யும் போது நம்மைச் சார்ந்தவர்களுக்கும், மற்ற எல்லோருக்கும் இந்தப் பிரார்த்தனை சென்று சேரும். இதை அலையுண்டாக்கும் பிரார்த்தனை என்று சொல்லலாம்.  ஒரு கல்லை நாம் தண்ணீரில் போட்டால் அலையலையாக ஏற்பட்டு அது எப்படி பரவுகிறதோ அப்படித்தான் பிரார்த்தனையின் வலிமையும் இருக்கும்.

     பொதுவாகவே காலையில் எழுந்ததும், இன்றைய தினம் நன்றாக , இருக்கவேண்டும்.  வீட்டில் உள்ளவர்கள், முதியவர்கள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும், குழந்தைகள் நன்றாகப் படிக்கவேண்டும், கணவனுக்கு வேலையில் டென்ஷன் இல்லாமல் இருக்கவேண்டும் என்று இப்படி பலப்பல எண்ணுகிறோமே, இது போன்ற பிரார்த்தனையை கொஞ்சம் விரிவுபடுத்தினால் அதாவது உலகத்தில் உள்ள எல்லோருக்கான பிரார்த்தனையாக மலரும்.  வெளிநாட்டில் வேலை செய்யும்  நம் குழந்தைக்காக நாம் பிரார்த்தனை செய்யும்போதே, அந்த நாட்டில் வாழும் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்தால் நன்றாக இருக்கும் அல்லவா?

     தினசரி ஒவ்வொரு வேளையும் சாப்பிட ஆரம்பிக்கும்போது பாபாவினை மனதில் நினைத்து, இந்த பூவுலகத்தில் வாழும் அனைத்து ஜீவ ராசிகட்கும் போதிய ஆகாரம் கிடைக்கவேண்டும் என பிரார்த்தனை செய்யலாம். இப்படியே ஒவ்வொன்றுக்கும் பிரார்த்தனை செய்யலாம். இரவு உறங்கும் முன் முதியவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டோர், மருத்துவ மனையில் இருப்போர் போன்றவர்களுக்காக பாபாவிடம் முறையிட்டு இவர்கள் யாருக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என பிரார்த்தனை செய்யலாம்.  இந்தப் பிரார்த்தனை நமது இதயத்திலிருந்து எழுந்து வருவதாக இருக்கவேண்டும். இப்படி தொடர்ந்து செய்வோமானால் நம்மையறியாமலேயே நமது இதயத்திலிருந்து அலாதியான சக்தி நம்முள் எழுந்து நம்மை எழுப்பும். இதன் விளைவாக நலிந்தோர் குணமடைய வாய்ப்புண்டு.
  நீல் டொனால்ட் வால்ச் (Neale Donald Walsch) தனது புத்தகமான ஹேப்பியர் தென் காட் (Happier Than God: Turn Ordinary Life into an Extraordinary Experience (February 28, 2008) ISBN 978-1-57174-576-7) என்ற புத்தகத்தின் வாயிலாக என்ன சொல்கிறார் என்றால், நாம் எந்தவிதமான பிரார்த்தனை  வைத்தாலும், அதை இயற்கை ஏற்றுக்கொள்ளும். அதாவது ததாஸ்து என்று சொல்லும். ததாஸ்து என்றால் அங்கனமே ஆகட்டும் என்று பொருள். ஆகையால் நாம் பிரார்த்தனை செய்யும்போது வார்த்தைகளை நன்கு தேர்வு செய்யவேண்டும். எதிர்மறை வார்த்தைகளை, தேவையற்ற வார்த்தைகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

  இன்றைக்கு விபத்து ஏதும் நேரிடக்கூடாது என பிரார்த்தனை செய்யாமல், இன்றைக்கு அனைவரும் பாதுகாப்பாக பயணம் செய்யவேண்டும் என்று பிரார்த்தனை செய்யவேண்டும். இப்படி செய்யும் போது இயற்கை அங்கனமே ஆகட்டும் என்று சொல்லும். இதிலிருந்து அனைவருக்கும் பாதுகாப்பும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.  இயற்கை வேண்டாம் கூடாது என்ற எதிர்மறை வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாது.

  எதிர்மறை அல்லது கெட்ட விஷயங்களை அழிக்க வேண்டும் என்றால் நமது பிரார்த்தனையில் நேரடியான பாசிட்டிவ்வான வார்த்தைகளைப் பயன்படுத்தவேண்டும்.  அப்போது பாபா நமக்கு உதவி செய்வார்.  பாகுபாடற்ற பிரார்த்தனையின் மூலம் நாம் அனைவரும் ஒருவரே, நமக்குள் பேதமில்லை, நம்முள் இருப்பவர் ஒருவரே என்ற எண்ணம் தோன்றும்.  சாயி “நான் எல்லோர் உள்ளத்திலும், எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறேன்” என அடிக்கடி கூறுவார்.  ஆகவே நாம் பிரார்த்தனையில் பாசிட்டிவ்வான சொற்களையே பயன்படுத்தவேண்டும்.

  இந்த அணுக்கள் எல்லாம் அன்பு, பாசம், நட்பு என்ற வார்த்தைகளில் கூடியுள்ளது.  அதனால் எல்லோருக்கும் சாந்தி, நல்லுணர்வு, ஆசிர்வாதம் கிடைப்பது திண்ணம்,

  ததாஸ்து.

நன்றி:  சாயிலீலா, சுமோனா பாக்ஸி, புதுதில்லி
தமிழில்: வெங்கட்ராயன், ஊத்துக்கோட்டை

நீல் டொனால்ட் வால்ச் (Neale Donald Walsch) பற்றி
 மேலும் அரிய இங்கே சொடுக்கவும்.

கர்மாவினை வாங்கமுடியுமா?


சில சாயி அடியார்கள், பிறரது கர்மாவை தாங்கள் வாங்கிக்கொள்வதாக கதை அளக்கிறார்களே! இதைப் பற்றி தங்கள் கருத்தென்ன?
(பி.மகேஸ்வரி, உத்திரமேரூர்)

     நீங்கள் வங்கியில் கடன் வாங்கியிருக்கிறீர்களா? அல்லது சூரிட்டி எனப்படும் ஜாமீன் தந்தது உண்டா? அப்படியிருந்தால் மட்டுமே இந்த விஷயத்திற்க்கான பதில் உங்களுக்குப் பொருந்தும்.

     ஒருவர் கடன் படுவதாக இருந்தாலும், இவருக்கு கடன் தரலாம், அதற்க்கு நான் உத்திரவாதம் தருகிறேன் என வேறு ஒருவர் கையெழுத்து போடவேண்டும். கடன் வாங்கியவர் கட்டத் தவறினால், இவரிடம் கடனை வசூலிப்பார்கள். கடன் வாங்கி அனுபவித்தவன் தப்பித்துவிட்டான், அனுபவிக்காமல் கையெழுத்து போட்டவன் மாட்டிக்கொண்டான் என்பதுதான் கடன் பட்ட இடத்தில் ஜாமீன் போடுவது.

     இப்படித்தான் அடியார்கள், இவனது கர்மாவிற்க்கு நான் ஜாமீன் ஏற்கிறேன் என்பது. அவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ கடவுளிடம் பிரார்த்தனை செய்து, பாதிக்கப்பட்டவருக்கு நன்மை அளிக்கிறார்கள்.

     நன்மையைப் பெற்றவன் நல்லவனாக இருந்து புண்ணியங்களைச் செய்தால் பிரார்த்தனை செய்தவருக்கும், செய்யப்பட்டவருக்கும் நல்லது. இல்லாதபட்சத்தில் பிரார்த்தனை செய்தவர் அந்தக் கர்மாவை ஏற்றுக்கொள்வது என்பது உண்மைதான். இதை பாபாவே பிளேக் கட்டி போன்ற விஷயங்களில் நிரூபித்து இருக்கிறார்.   இயேசு கிறிஸ்துவினைப் பற்றி சொல்லும்போது அவர் உலகத்தில் பாவங்களைச் சுமந்து தீர்த்த ஆட்டுக்குட்டி என்பார்கள்.

Wednesday, January 23, 2013

என் வாக்குகள் பொய்யாவதில்லை


என் வாக்குகள் பொய்யாவதில்லை

ஸ்ரீ சாயியின் அமுத மொழிகளை விடாமல் நினைவு கூர்ந்து நாமஸ்மரணை செய்வீர்களேயானால் உங்களது மனதை வருத்தும் கவலைகள், அல்லல் மற்றும் அவஸ்தைகள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும் என்பது சத்தியமான உண்மை. சதாசர்வகாலமும் சாயி சாயி என்று உச்சரித்து அவரது திருவடிகளை பரிபூரணமாக சரணடையுங்கள், நினைத்தது நிறைவேறும் இனி அவரது வாக்குறுதிகளை தினம் ஒன்றாக இங்கே பார்க்கலாம்.

நீங்கள் கேட்டதையெல்லாம் நான் தருவேன். என் கஜானா நிரம்பி வழிந்துக்கொண்டிருக்கிறது. என் உதவியையும் அருளையும் அள்ளித்தர நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.

 ஸ்ரீ சாயியின் வாக்குறுதிகள் சத்தியமானவை, அவைகளை முழு மனதோடு நம்பிப் பொறுமையாக பின்பற்றினால் எல்லா நலனும் பெறுவீர்கள்,  இந்த ஆண்டு முதல் உங்கள் வாழ்க்கை வளமாவதற்க்கு நீங்கள் இந்த வாக்குறுதிகளை உங்களுக்கு உரியதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஜெயிப்பீர்கள்

ஜெய் சாய்ராம்

கிறித்துவர்கள் நட்சத்திரம் கட்டுவது ஏன்?



கிறித்த்வர்கள் இயேசு பிறந்த நாளில் நட்சத்திரங்களைக் கட்டுகிறார்களே! அது ஏன்?  இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
(கே.ஆர்.ராமமூர்த்தி, சென்னை – 3)

     இது நமது சமயத்தின் கோட்பாடுகளில் ஒன்று.  இதை அறியாத கிறித்துவர்கள், ஏதோ இதனை தங்களது கண்டுபிடிப்பு என நினைத்துப் பின்பற்றுகிறார்கள்.

     நாம் ஒவ்வொருவர் பிறக்கும்போதும் அதற்கு அடையாளமாக ஒரு நட்சத்திரம் தோன்றும் என்றும், நாம் மம் என்றும், நாம் மறையும் போது அதுவும் மறைந்துந்துவம் என்றும் நமது நம்பினார்கள்.  மிகப்பெரிதாக மின்னுவது புகழ் பெற்றவர்கள் என்பதற்க்கும், மிக மெல்லிதாக மின்னுவது சாதாரண மனிதர்களாக கருதப்பட்டார்கள்.  இதனால்தான் வானத்தில் எண்ணிக்கையற்ற நட்சத்திரங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஒரு நட்சத்திரம் கீழே விழுந்தால் யாரோ ஒருவர் மரணமடைகிறார் என்று சொல்வது இதனை ஒட்டித்தான்.

     இயேசு கிறிஸ்து பிறந்தபோது மிகப் பெரிய வால் நட்சத்திரம் தோன்றியதை கீழ்த்திசை நாட்டிலிருந்து மூன்று ஞானிகள் பார்த்து இவ்வளவு பெரிய நட்சத்திரம் தோன்றியிருக்கிறதே…அப்படியானால் மிகப் பெரிய ஞானி ஒருவர் தோன்றியிருக்கிறார் என்பதை உணர்ந்து , அதைப் பின் தொடர்ந்து சென்றார்கள் என்றும். ஜெருசலேம் நகரிலுள்ள பெத்லகேம் என்ற ஊரில் இருந்த ஒரு மாட்டுத் தொழுவத்தில் இயேசு கிறிஸ்து பிறந்திருப்பதைப் பார்த்து அவரை தொழுதார்கள் என்று பைபிள் கூறுகிறது.  நம்மில் புகழ் பெற்றவர்களைப் பார்க்கும் போது அவரை ஸ்டார் என்று கூறுவதும், அவரை சூப்பர் ஸ்டார் என்றும் கூறுவது இதனால்தான்.

     குழந்தைக்கு ஈஸா என்று பெயர் சூட்டினார்கள். ஈஸா என்றால் இறைவன் என்று பொருள்.  நமது ஈஸாவாஸ்ய உபநிடத்தின் கோட்பாடுகளைத் தான் இயேசுக்கிறிஸ்து பின்பற்றினார் என்பதை ஆராய்ந்து பார்த்தால் தெரியும்.

Tuesday, January 22, 2013

என் வாக்குகள் பொய்யாவதில்லை


என் வாக்குகள் பொய்யாவதில்லை

ஸ்ரீ சாயியின் அமுத மொழிகளை விடாமல் நினைவு கூர்ந்து நாமஸ்மரணை செய்வீர்களேயானால் உங்களது மனதை வருத்தும் கவலைகள், அல்லல் மற்றும் அவஸ்தைகள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும் என்பது சத்தியமான உண்மை. சதாசர்வகாலமும் சாயி சாயி என்று உச்சரித்து அவரது திருவடிகளை பரிபூரணமாக சரணடையுங்கள், நினைத்தது நிறைவேறும் இனி அவரது வாக்குறுதிகளை தினம் ஒன்றாக இங்கே பார்க்கலாம்.

பக்தன் என்னை எப்படிப்பட்ட  பக்தியுடன் உணருகிறானோ, அப்படிப்பட்ட அனுபவங்களை அவனுக்குத் தருவேன்.

 ஸ்ரீ சாயியின் வாக்குறுதிகள் சத்தியமானவை, அவைகளை முழு மனதோடு நம்பிப் பொறுமையாக பின்பற்றினால் எல்லா நலனும் பெறுவீர்கள்,  இந்த ஆண்டு முதல் உங்கள் வாழ்க்கை வளமாவதற்க்கு நீங்கள் இந்த வாக்குறுதிகளை உங்களுக்கு உரியதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஜெயிப்பீர்கள்

ஜெய் சாய்ராம்

கடன் தொல்லை தீரவில்லையே?


கடன்காரர்கள் திட்டுகிறார்கள், மானம் போகிறது, உயிரை விட்டுவிடலாம் என்று கூட நினைக்கிறோம்.  பாபா எதற்காக கடன் பிரச்சனையை தீர்க்க மாட்டேன் என்கிறார்? சொல்லுங்கள்.
(கே.கோமதி, வேலூர் – 3)


     பாபா உங்களை கடன் வாங்க சொன்னாரா? அல்லது அவரைக் கேட்டு கடன் வாங்கினீரா?  சீட்டுக் குலுக்கி போட்டுப் பார்த்தேன் என்பதும், சத்சரித்திரத்தில் கை வைத்துப் பார்த்தேன் என்பதும் சரியான முறையல்ல.  நேரம் கெட்டுவருகிறது என்பதை அடுத்தடுத்து வரும் சிறு சிறு தோல்விகளின் போது தெரிந்துக்கொள்ளலாம். இத்தகைய நிலையில் நாம் தான் எச்சரிக்கையாக இருந்து கொள்ளவேண்டுமே தவிர கடனை அடைப்பதாக நினைத்தோ, தொழிலை புதிதாகத் தொடங்க திட்டமிட்டோ கடன்படக்கூடாது.

     எவ்வளவு கடன்பட்டாலும் அது விழலில் இறைத்த நீருக்குச் சமமாகிவிடும்.  அடுத்து நமது கர்மாவை நாம் கடனாக, நோயாக, பிரச்சனைகளாக சுமந்து  தீர்க்கவேண்டியிருக்கிறது என பலமுறை கூறியிருக்கிறோம்.  அடித்து உதைத்தாலும் உங்களிடமிருந்து கடன் வசூலாகாது என்பது தெரிந்தும் கடன் கொடுத்தவர் திட்டுவது அவரது இறுக்கமான மனத்தை ரிலாக்ஸ் செய்வதற்க்காக என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால், அவர் ஒவ்வொரு முறை திட்டும் போதும் ரிலாக்ஸ் செய்து கொள்கிறார் என நினைத்துக்கொள்வீர்கள், அவரும் எவ்வளவுதான் திட்டினாலும் சொரணையில்லையே எனப் புலம்பி கடன் திருப்பி அளிக்கும் வரை பொறுமை காப்பார். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி   கடனை அடைப்பதற்க்கு அவகாசமும் தருவார்.

Monday, January 21, 2013

என் வாக்குகள் பொய்யாவதில்லை


என் வாக்குகள் பொய்யாவதில்லை

ஸ்ரீ சாயியின் அமுத மொழிகளை விடாமல் நினைவு கூர்ந்து நாமஸ்மரணை செய்வீர்களேயானால் உங்களது மனதை வருத்தும் கவலைகள், அல்லல் மற்றும் அவஸ்தைகள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும் என்பது சத்தியமான உண்மை. சதாசர்வகாலமும் சாயி சாயி என்று உச்சரித்து அவரது திருவடிகளை பரிபூரணமாக சரணடையுங்கள், நினைத்தது நிறைவேறும் இனி அவரது வாக்குறுதிகளை தினம் ஒன்றாக இங்கே பார்க்கலாம்.

எப்பொழுதும் உங்கள் சுமைகளை நான் சுமக்கிறேன். என் வாக்கு பொய்யாவதில்லை. 
 ஸ்ரீ சாயியின் வாக்குறுதிகள் சத்தியமானவை, அவைகளை முழு மனதோடு நம்பிப் பொறுமையாக பின்பற்றினால் எல்லா நலனும் பெறுவீர்கள்,  இந்த ஆண்டு முதல் உங்கள் வாழ்க்கை வளமாவதற்க்கு நீங்கள் இந்த வாக்குறுதிகளை உங்களுக்கு உரியதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஜெயிப்பீர்கள்

ஜெய் சாய்ராம்

உண்மை எது?




ஒரு முறை நீங்கள் கடவுள்தான் பாரத்தை சுமக்கிறார். அவர் மீது பாரத்தை வைத்துவிட்டு பேசாமல் இருங்கள் என்று கூறுகிறீர்கள்.  இன்னொரு முறை நீங்கள் எதையேனும் செய்தால் கடவுள் உடன் இருந்து அருள் பாவிப்பார் என்று சொல்கிறீர்கள்.  இது எனக்கு குழப்பமாக இருக்கிறது.  எது உண்மை?
(எஸ்.மகேஷ், வேலூர்)


     இரண்டுமே உண்மைதான்.  நீங்கள் பள்ளிக்கூடத்தில் சேர்ந்த போது அம்மா, ஆடு, இலை, ஈ, மரம், மாடு என்றெல்லாம் படம் காட்டி சொல்லிக் கொடுத்த்தார்கள்.  நீங்கள் பட்ட மேற்படிப்பு படிக்கிற காலத்திலும் இதையே காட்டிக்கொண்டிருந்தால் நீங்கள் சிரிக்க மாட்டீர்களா?

     இப்படித்தான் ஆன்மீகத்தில் நுழையும் முன் குழப்பத்தில் இருக்கும் ஒருவனுக்கு கற்பிக்கும் போது நீ செயல்படு, இறைவன் உடனிருப்பான் எனச் சொல்லித்தருகிறேன். அவன் மேல் நிலைக்கு வந்து விட்ட பிறகு எல்லாவற்றுக்கும் கடவுளே காரணம் என்பதை புரிய வைத்து, சுமப்பது நாமல்ல, அவன் தான்! நீ சும்மா இரு என காட்டிக்கொடுக்கிறேன்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...