Monday, January 7, 2013

பாபா செய்த அற்புதம்


பாபா செய்த அற்புதம்

குழந்தை வரம் தருவார் பாபா

திருப்பூரைச் சேர்ந்த கஸ்தூரி அம்மா மகன் திரு ராஜமாணிக்கம், சாயி பாபா தனக்குச் செய்த அற்புதங்களை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிற அனுபவத்தின் தொடர்ச்சி.......
இதன் முதல் பகுதியினை படிக்க இங்கே சொடுக்கவும்
இதன்  இரண்டாம் பகுதியினை படிக்க இங்கே சொடுக்கவும்

திருமதி கஸ்தூரி அவர்களின் மகன் திரு ராஜமாணிக்கம் தொடர்கிறார்.

சென்னை குரோம்பேட்டையில் அண்ணாமலை பல்கலைக்கழகப் பொறுப்பாளராகவும், அதில் பேராசிரியராகவும் இருந்து வருகிறேன். திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.  கடவுள் மேல் நம்பிக்கை வைத்து மருத்துவ சிகிச்சைகளையும் தொடர்ந்து வந்தேன்.

‘சாயிபாபாவிடம் விரதமிருந்து வேண்டுதல் செய்.  பலிக்கும்’, என்று அம்மா கூறினார். விரதம் இருக்க முடிவெடுத்தேன்.  அப்போது என் நண்பர் ஒருவர் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, எப்படியோ எனது தொலைபேசி என்ணைக் கண்டுபிடித்து கோவையில் இருந்து போன் செய்தார்.

அவரது விசாரிப்பின் போது எனக்கு குழந்தையில்லை என்று தெரிந்ததும், ‘நீ  பாபாவின் விரதத்தினை அனுசரி.  உனக்கு நிச்சயமாக குழந்தைப் பேறு கிடைக்கும்.  குழந்தைப் பேறில்லாமல் இருந்த எனக்கு அருள் புரிந்த பாபா உனக்கும் அருள் புரிவார்’, என்றார்.  அம்மா சொன்னதும், எனது பழைய நண்பரின் போன் தகவலும் ஒன்றாக எனது நம்பிக்கையினை தூண்டியது.

இவரைஒ போலவே லண்டனில் வசித்து வரும் எனது நண்பர் ஐயம் பெருமாள், ஆண்டு தோறும் தவறாமல் சீரடிக்குச் செல்வார்.  அவர் இந்தியா வந்தபோது, எனது நிலையினை அறிந்து, சீரடிக்குச் சென்றபோது எனக்காக ஒரு பாபா சிலையினை வாங்கி வந்து என்னிடம் கொடுத்து, ‘இதை வைத்து பூஜை செய், பாபாவின் அருளால் குழந்தைப்பேறு கிடைக்கும்’, என்று வாழ்த்தினார். அத்துடன் பாபாவின் சமாதியில் வைக்கப்பட்ட மாலையினையும் அளித்தார். இன்னமும் அந்த மாலை என் வீட்டில் உள்ளது.

நானும், என் மனைவி ஜெய ஷீலாவும் சாயி விரதத்தினை துவக்கி 2012 ஜனவரி 12ம் நாள் முடித்தோம்.  அடுத்த பரிசோதனைக்கு டாக்டரிடம் சென்றபோது என் மனைவி கருவுற்று இருப்பதை டாக்டர் உறுதி செய்தார்.

எல்லோரும் பெண் குழந்தை பிறக்கும் என்றனர். அம்மாவும் பாபாவிடம் வேண்டினார்.  அவரே நம்ப முடியாத ஆச்சரியமாக அழகிய ஆண் குழந்தை செப்டெம்பர் 12ம் நாள் பிறந்தது, அவனுக்கு சாயி சஷாந்த் என்று பெயர் வைத்துள்ளோம்.

குழந்தை பிறப்பதற்க்கும், எனது அம்மாவின் உடல்நிலை தேறவும் சரியாக இருந்தது. இன்றைக்கு எங்கள் குடும்பம் மகிழ்ச்சியோடும், நிறைவோடும் இருக்கிறது.

ஒவ்வொன்றிலும் அற்புதங்களைச் செய்கிற பாபா, சக்திக்கு மீறிய செலவினையும் அதை சமாளிக்க தேவையான சக்தியினையும் அளித்திருக்கிறார். 

ஜெய் சாய்ராம்.

1 comment:

  1. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...