Tuesday, January 15, 2013

கிரக பாதிப்புகள் உன்னை ஒன்றும் செய்யாது


கிரக பாதிப்புகள் உன்னை ஒன்றும் செய்யாது


     இப்போது நம்முடைய பார்வையெல்லாம் எந்தக்கிரகம் சரியாக இல்லை என்பதில்தான் இருக்கிறது. இந்த கிரகங்களின் தாக்கம் சரியாக இல்லை என்று தெரிய வந்துவிட்டால் நாம் எல்லாம் சோர்ந்துவிடுவோம். போர்க்களத்தில் சோர்ந்து போன அர்ஜுனன் மாதிரியான நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவோம்.
     என்னதான் சாயி பக்தராக இருந்தாலும் இந்தச் சோர்வு ஏற்படுவது இயல்புதான்.  இந்தச் சோதனை நமக்கு மட்டுமல்ல, சமாதி மந்திரைக் கட்டிக் கொடுத்த பூட்டிக்கும் ஏற்பட்டது.
     அவர்  ஒரு பெரிய பணக்காரர். அவருக்கு நானா சாகேப் டெங்கலே என்ற ஜோதிட நண்பர் இருந்தார்.  அவர் சொன்ன பல விஷயங்கள் பூட்டியின் வாழ்க்கையில் பலித்தது.  இதனால், டெங்கலேயை பூட்டி மிகவும் மதித்தார்.
     ஒரு முறை பூட்டியை சந்தித்த டெங்கலே, ‘இன்று உங்களுக்கு கெட்ட காலம்!  எதிர்பாராத பேராபத்து வரப்போகிறது!  எச்சரிக்கையாக இருங்கள்’ என்றார். 
     இதைக்கேட்டு பூட்டிக்கு பயம் வந்துவிட்டது.  என்ன செய்வதென்றே தெரியாமல் மசூதிக்கு வந்தார்.

     அங்கிருந்த பாபா, ‘அந்த டெங்கலே என்ன சொன்னான்? அவன் என்ன உன்னைக் கொல்ல முயற்சிக்கிறானா?  நீ பயப்படத் தேவையில்லை, அவன் உனக்கு எவ்வாறு துன்பம் செய்யப்போகிறான் என்பதைப் பார்த்துக் கொள்கிறேன்” என்று உறுதியாகக் கூறினார்.
     அன்று முழுக்க பாபாவின் பாதுகாப்பில் இருந்த பூட்டி கழிவறைக்குச் சென்றார். அங்கே ஒரு பெரிய பாம்பு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.  அதைக் கொன்றுவிட வேண்டும் என நினைத்து கம்புகளை தேடினார்.  ஒரு பெரிய தடியினை எடுத்துக்கொண்டு வந்து பார்க்கும் போது அந்தப் பாம்பு மாயமாக மறைந்து போயிருந்தது.
     பூட்டியிடம் நானா சொன்ன பேராபத்து இதுதான் என்றும், இதைப் பற்றித்தான் பாபாவும், ‘அவன் என்ன உன்னைக் கொல்ல முயற்சிக்கிறானா?  நீ பயப்படத் தேவையில்லை, அவன் உனக்கு எவ்வாறு துன்பம் செய்யப்போகிறான் என்பதைப் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறினார் என்பதையும் பூட்டி நன்றாக உணர்ந்து கொண்டார்.
     எத்தகைய கிரக பாதிப்புகள் இருந்தாலும், மரணத்தைத் தருவதாக இருந்தாலும் அவையெல்லாம் நமது சமர்த்த சாயியின் முன்னால் ஒன்றும் இல்லாததாகிவிடும் என்பதற்க்கு இது ஓர் உதாரணம்,

பி.வீரமணி
சைதாப்பேட்டை

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...