Friday, January 4, 2013

பாபா செய்த அற்புதம்



பாபா செய்த அற்புதம்



திருப்பூரைச் சேர்ந்த கஸ்தூரி அம்மா, சாயி பாபா தனக்குச் செய்த அற்புதங்களை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறார்.

என் பெயர் கஸ்தூரி.  கணவர் ஏகாம்பரம். பிள்ளைகள் ரங்கநாயகி, ராஜமாணிக்கம் ஆகியோருடன் திருப்பத்தூரில் எளிமையாகவும், திருப்தியாகவும் வாழ்ந்து வந்தேன்.

      துவக்கம் முதல் ஸ்ரீ ராகவேந்திரா பக்தை.  ராயரை வணங்காமல் எதையும் செய்யமாட்டேன்.  என் குடும்பமும் அப்படித்தான்.  எனது பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும்போது அடிக்கடி அவர்களை மந்திராலயம் அழைத்துச்சென்று வருவேன்.  அவரை கும்பிடாமல் வெளியே எங்கும் செல்லக்கூடாது என்பேன்.  நேரடியாக பலமுறை ராகவேந்திரரை தரிசனம் செய்திருக்கிறேன்.  என் பிள்ளைகளும் அவரை தரிசனம் செய்திருக்கிறார்கள்.  அத்தகைய ஆழ்ந்த பக்தியை அவர் மீது நாங்கள் கொண்டிருந்தோம்.

      என் மகன் பத்தாம் வகுப்பு கூட தாண்டமாட்டான் என்றனர்.  ராயரிடம் இவன் என் பிள்ளையல்ல, உன் பிள்ளை.  நீங்கள்தான் இவனை படிக்க வைக்க வேண்டும் என வேண்டுதல் செய்வேன். ராயரின் அருளால் என் மகன் பி.எச்.டி முடித்து பேராசிரியராக உள்ளான்.
     
      வியாழன் தோறும் விரதம் இருப்பேன்.  அன்று எதையும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் இருப்பது வழக்கம்.  துவக்கத்தில் பாபா மீது ஈடுபாடு ஏதும் கிடையாது.  படிப்படியாக அவர் மீது பக்தி வளர்ந்தது.  எப்போதும் அவரது திருநாமத்தையே சொல்லும் அளவு மனத்தை அவர் ஆக்ரமித்துக்கொண்டார்.  பாபா உதியினை சாப்பிடாமல் படுக்க மாட்டேன்.  அவரது திருநாமத்தினை உச்சரிக்காமல் எதையும் செய்வதில்லை. இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் அவரை அணு அணுவாக வணங்கி வருகிறேன்.

      எனக்கு சில மாதங்களுக்கு முன்பு...............                       (தொடரும்)

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...