Sunday, January 13, 2013

உன் வாழ்க்கையில் புதிய வெளிச்சம் ஏற்படும்!


உன் வாழ்க்கையில் புதிய வெளிச்சம் ஏற்படும்!

இரவு முடிந்து வெளிச்சம் வந்துவிட்டது.  பழைய ஆண்டுகள் கழிந்து புதிய ஆண்டுகளின் துவக்கத்தில் காலடி எடுத்து வைத்து இருக்கிறீர்கள்.
     புதிய ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த நாளீல் உங்களை வாழ்த்துகிறேன்..
     உங்கள் துக்கமான நாட்கள் முடிவுக்கு வந்திவிட்டன.  இனி புதிய மகிழ்ச்சியை அனுபவிக்கப்போகிறீர்கள்.  உறக்கமின்றிக் கழித்த நாட்கள் முடிவுக்கு வருகின்றன.  கடன்பட்ட காலங்கள் கானல் நீராக மாறும் காலத்தில் இப்போது இருக்கிறீர்கள்.  கட்ந்த காலத்தவறுகள் இனி நிகழாமல் இருக்கவும், கடந்த கால வளமான நாட்கள் தொடரவும் எனது ஆசிகளை வழங்குகிறேன்.
     நான் இல்லாமல் போய்விடுவேன் என ஒரு காலும் நினைக்காதீர்கள். என் சமாதி உங்களோடு பேசும் என்று நான் கூறியதையும், சமாதியிலிருந்து என் எலும்புகள் உங்கள் நலனை விசாரிக்கும் என்று நான் கூறியதையும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.  இதோ துவக்கம் முதல் முடிவு வரை உங்களோடும், உங்களை பிரியாமலும் இருந்து காப்பாற்றுவேன்.  நீங்களும் உங்களது தாய், தந்தை, கடவுள் மற்றும் குருவான என்னிடம் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்ளவேண்டும் என விரும்புகிறேன்.
     நீங்கள் என் விருப்பப்படி நடந்தால் நான் உங்களோடு இருப்பதைப்போல உங்கள் பிள்ளைகளோடும் இருந்து உங்களைக் காப்பாற்றுவேன்.  இனி நீங்கள் கஷ்டத்தைக் காணாமல் இருப்பீர்கள்.
     என் பக்தனின் வீட்டில் தேவைகள் என்பதே இருக்காது என்று நான் சொன்ன வார்த்தைகளை நிறைவேற்றுவேன் எனது விருப்பத்திற்க்கு மாறாக நீங்கள் நடப்பதை நான் விரும்புவதில்லை.
எனவே, என் பிள்ளைகளே!  இன்னும் கொஞ்ச காலத்தை சகித்துக்கொள்ளுங்கள்.
இப்பொழுது புதிய வெளிச்சம் புதிய ஆண்டை உருவாக்கியிருப்பது எப்படி நிச்சயமானதோ அப்படியே புதிய வாழ்வை நீஙகள் அனுபவிக்கப்போவதும் நிச்சயம். உங்கள் நம்பிக்கை ஒரு நாளும் வீண் போகாது.
உங்களுக்காக புதிய பாதைகளை இதோ நான் உருவாக்கி அதில் உங்களை நடக்க வைக்கிறேன் என்பதே இந்த ஆண்டின் துவக்கத்தில் நான் தரும் இனிய புத்தாண்டுச் செய்தியாகும்.

அப்பா, சாயிபாபா. 

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...