Monday, December 31, 2012

உபயோகமான குறிப்புகள்


உபயோகமான குறிப்புகள்

பலவகை குளியல்கள்

பிரம்மசாரியாக இருப்பவன் காலையில் நீராடவேண்டும்

குடும்பஸ்தன் காலை, மதியம் இருவேளை நீராடவேண்டும்

துறவி மூன்று வேளையும் நீராடவேண்டும்


குளிக்க போகும் போது ஒரு சில கடைப்பிடிக்கவேண்டிய விஷயங்கள்:

எந்த நீரில் குளித்தாலும் அந்த நீர் பகவான் பாதத்தில் இருந்து வரும் கங்கையாக கருத வேண்டும்.

குளிக்க நீர் கிடைக்காத போது இறைவன் நாமத்தினை மனதிற்க்குள் சொல்லிக்கொள்ளவேண்டும்.  இது மானசீகக் குளியலாகும்.

குருவினை தரிசித்து அவரது பாத நீரினை தலையில் தெளித்துக் கொள்வது தீர்த்தக் குளியலாகும்.

விரதம், சிரார்த்தம், விருக்தி சடங்கு, துக்க சடங்கு உள்ளபோது வெந்நீரில் குளிக்கக்கூடாது.

மங்களகரமான திருமணம் மற்றும் பிற கொண்டாட்டங்களின் போது குளிர்ந்த நீரில் குளிக்கக்கூடாது.

ஓடும் நதி நீரில் நீரோட்டத்தின் எதிரிலும், குளம் முதலியவைகளில் கிழக்கு நோக்கி நின்று நீராடவேண்டும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...