Thursday, June 4, 2015

ஸ்ரீ சனி பகவான் பரிகாரத் திருத்தலம்




பக்தர்களின் கிரக தோக்ஷம் நீங்குவதற்காக சாயி பாபாவின் அனுக்கிரகம் மற்றும் குரு தேவர் ஸ்ரீ சாயி வரதராஜன் ஆசியுடன் நவம்பர் மாதம் கீரப்பாக்கம் மலையில் சனி பகவான் பரிகாரத்திருத்தலம் அமைக்க வாஸ்து பூஜை போடப்பட்டது.
அனுபூதி சித்தர் வாஸ்து பூஜையை நடத்தினார். சமதர்ம சமாஜ் அறக்கட்டளையின் பொருளாளர் ஸ்ரீதரன் மற்றும் வேணுகோபால், ஆறுமுகம், கீரப்பாக்கம் ரவி, சுவாமி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
எல்லோருக்கும் மேலான தெய்வமான சத்குருவை சரணடைந்தவர்களுக்கு கிரக தோக்ஷத்தால் பாதிப்பு ஏற்படாது. ஆனால், முற்றிலும் சத்குருவை சரணடையாமல் பக்தர்களாக உள்ளவர்கள் பரிகாரம் தேடி, பல இடங்களுக்கு அலைகிறார்கள். இவர்களுக்குப் பணச் செலவும், நேரச்செலவும் ஏற்படுவதுதான் மிச்சம்.
இவர்களின் குறைகளைப் போக்குவதற்காக இந்த பரிகாரத் திருத்தலம் அமைகிறது. மகாராஷ்டிர மாநிலம் சனி சிக்னாப்பூரில் உள்ளது போன்று திறந்த வெளியில் சனி பகவானை பிரதிஷ்டை செய்து எதிரில் மண்டபம் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கைங்கர்யத்தை பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தில் நேரடியாகவோ அல்லது உறையிட்ட கவரில் வைத்து அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். பக்தர்கள் தாங்களாக சனி பகவானை சேவித்து, பூஜை செய்து பலனடையலாம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...