Monday, December 30, 2013

காகா மஹாஜனி

  காகா மஹாஜனி ஒருமுறை சிர்டீயில் ஒருவாரம் தங்கவேண்டுமென்ற விருப்பத்துடன் பம்பாயி­ருந்து சிர்டீக்கு வந்தார்.
ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி ஏற்பாடுகள் முன்கூட்டியே ஆரம்பிக்கப்படும். சாவடி மிக அழகாக அலங்கரிக்கப்படும்; பாபாவினுடைய இருக்கைக்கு எதிரில் ஒரு தொட்டில் கட்டப்படும். பக்த ஜனங்கள் ஆனந்தக்கூத்தாடுவர்.

     மகிழ்ச்சி தரும் கோகுலாஷ்டமி பண்டிகையின் கோலாகலங்களில் நேரில் கலந்துகொள்ளும் ஆவலுடன் காகா சில நாள்களுக்கு முன்னமேயே வந்துவிட்டார்.

     ஆனால், முதல் தரிசனத்திற்குப் போனபோதே பாபா கேட்டார், ''ஆக, எப்பொழுது நீர் வீடுதிரும்பப் போகிறீர்? இதைக்கேட்ட காகா மஹாஜனி திடுக்கிட்டார்.

    ''என்னைப் பார்த்தவுடனே எதற்காக இந்தக் கேள்வியைக் கேட்டார்? என்று காகா திகைத்துப் போனார். வாஸ்தவத்தில் அவர் சிர்டீயில் எட்டு நாள்கள் தங்கவேண்டுமென்ற ஆவலுடன் வந்திருந்தார்.

     பாபா கேள்வியைக் கேட்டவிதத்திலேயே, என்ன பதில் சொல்லவேண்டும் என்பதைக் காகா நிர்ணயித்துவிட்டார். இதனால், காகா கொடுத்த பதில் மிகப் பொருத்தமாக அமைந்தது.

    ''எப்பொழுது பாபா ஆக்ஞையிட்டாலும் அப்பொழுது வீடு திரும்பிவிடுகிறேன் என்று காகா பதிலுரைத்தார். இந்தப் பதிலைக் காகா சொல்­லிக்கொண் டிருந்தபோதே, ''நாளைக்கே வீடு திரும்பிவிடும் என்று பாபா சொல்­விட்டார்.

    பாபாவினுடைய ஆக்ஞையை சிரசின்மேல் ஏற்றுக்கொண்டு, பாபாவை நமஸ்காரம் செய்துவிட்டு கோகுலாஷ்டமி விசேஷங்களையும் தள்ளிவைத்துவிட்டு பாபாவின் சொற்படியே வீடு திரும்பிவிட்டார் காகா.

    வீட்டை அடைந்தபின் அலுவலகத்திற்குச் சென்றபோது, முதலாளி அவருடைய வருகைக்காகச் சஞ்சலத்துடன் வழிமேல் விழிவைத்துப் பார்த்துக்கொண் டிருந்ததைக் கண்டார்.

     முதலாளியின் மணியக்காரர் திடீரென்று நோய்வாய்ப்பட்டிருந்தார்; ஆகவே, அவருக்குக் காகாவினுடைய உதவி அவசரமாகத் தேவைப்பட்டது. காகாவை உடனே திரும்பி வரச்சொல்­லி சிர்டீக்கு ஏற்கெனவே கடிதம் அனுப்பியிருந்தார்.

    தபால்காரர் காகாவைப்பற்றி விசாரித்துக்கொண்டு வந்தபோது, காகா சிர்டீயி­ருந்து கிளம்பிவிட்டிருந்தார். கடிதம் பம்பாய்க்குத் திருப்பி அனுப்பப்பட்டது. காகாவுக்கு இந்தக் கடிதம் தம் வீட்டில் கிடைத்தது.



ஸ்ரீ சாயி சத்சரித்திரத்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...