Thursday, August 10, 2017

ஷீரடியும் துவாரகாமாயியும்

ஷீரடியும் துவாரகாமாயியும்
*மஹா சமாதி எய்தும்வரை ஸ்ரீ சாயி வாழ்ந்து நடமாடிய ஷீர்டியும், துவாரகாமாயியும் நற்பேற்றுக்குரியவைகள்.
* யாருக்காக அவர் த்தனை தூரம் வந்தாரோ, எவருடைய நன்றிக்கடனுக்குத் தம்மை உரியவராக்கிக் கொண்டாரோ, அத்தகைய ஷீர்டி மக்கள் ஆசீர்வதிக்கப்ட்டவர்கள்.
* முதலில் ஷீர்டி ஒரு குக்கிராமம்தான்.  ஆனால் அவர் தம் தொடர்பின் காரணமாக, பெரும் முக்கியத்துவத்தை எய்திற்று.  ஒரு தீர்த்தமாகவும், புனிதப் பயணத்துக்குரிய ஒரு புண்ணிய ஷேத்திரமாகவும் ஆனது.
* ஷீர்டியின் பெண்மணிகளும் அதே அளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.  அவர்பால் அவர்கள் கொண்டிருந்த முழுமனதான அன்பும், சிதையாத நம்பிக்கையும் நற்பேற்றுக்குரியது.
*அவர்கள் குளிக்கும்போதும், சோளத்தை அரைக்கும்போதும், பொடி செய்யும்போதும், மற்ற இல்லற தர்மங்களைச் செய்யும்போதும் பாபாவின் புகழைப் பாடினார்கள்.  அவர்களின் அன்பு நற்பேற்றுக்குரியது.
*ஏனெனில் கேட்போரின், பாடுவோரின் மனங்களில் கொந்தளிப்பை அகற்றி சாந்தப்படுத்தக்கூடிய இனிமையான பாடல்களை அவர்கள் பாடினார்கள்.

                                                ஸ்ரீசாயிசத்சரிதம்   அத்யாயம்-39&50

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...