Wednesday, August 10, 2016

பாபா வழி ஆன்மிகம்

நிறைய பேர் பாபா வழி ஆன்மிகம் என்று நுழைந்து அவதிப் படுகிறார்கள். நீங்கள் எப்படி?
(என்.சித்ரா, அம்பாசமுத்திரம்)
பயணி ஒருவன் நகரத்திற்குள் நுழைந்து, வழியில் தென் பட்ட அந்தணர் ஒருவரிடம் பின்வருமாறு விசாரித்தான்.
இந்த நகரத்தில் மிக உயர்ந்தவை எவை?’  எனக் கேட்டான்.
கள் மரங்கள் என்றார் அந்தணர்.
அதிகமாகத் தருபவர் யார்?’ எனக் கேட்டான்.
 பிறரது துணிகளைத் துவைக்கும் சலவைக்காரன்தான் அதிகமாகத் தருபவன். தினமும் காலையிலேயே நகர மக்களின் துணிகளை வாங்கி வெளுத்து, சாயமேற்றி மாலையில் தருகிறான் என்றார்.
நகரத்தில் யார் அதிக புத்திசாலி எனக் கேட்டான் பயணி.
நகரத்திலுள்ள எல்லோருமே பிறரது பணத்தையும்,மனைவிகளையும் திருடுவதில் புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்றான்.
சரி, இப்படிப்பட்ட நகரத்தில் எப்படி வாழ்கிறீர்கள்?’  எனக் கேட்டான் பயணி.
என்ன செய்வது சாக்கடையில் பிறந்து, சாக்கடையில் வாழ்ந்து சாக்கடையிலேயே இறந்து, சாக்கடையை நச்சாக மாற்றும் புழுவைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றார்.
மக்கள் அதிகமாக கள் குடிப்பவர்களாகவும்,  பிறரை ஏமாற்றித் திருடுகிறவர்களாகவும், பிறர் மனை நாடுகிறவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதைக் கூறினார்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...