Monday, February 11, 2013

என் வாக்குகள் பொய்யாவதில்லை


என் வாக்குகள் பொய்யாவதில்லை

ஸ்ரீ சாயியின் அமுத மொழிகளை விடாமல் நினைவு கூர்ந்து நாமஸ்மரணை செய்வீர்களேயானால் உங்களது மனதை வருத்தும் கவலைகள், அல்லல் மற்றும் அவஸ்தைகள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும் என்பது சத்தியமான உண்மை. சதாசர்வகாலமும் சாயி சாயி என்று உச்சரித்து அவரது திருவடிகளை பரிபூரணமாக சரணடையுங்கள், நினைத்தது நிறைவேறும் இனி அவரது வாக்குறுதிகளை தினம் ஒன்றாக இங்கே பார்க்கலாம்.

நீ எனது ஒளியைக் காண விரும்பினால் அகங்காரம் அற்றவனாகவும், மிகவும் பணிவுடனும் இருப்பாயாக. எனது கால் பெருவிரலை இரண்டு கிளைகள் வழியாகத் தியானிப்பாயாக.  அதாவது சுட்டுவிரல், நடுவிரல் ஆகியவற்றின் இடையே நீ எனது ஒளியைக் காண இயலும்.  இதுவே பக்தியை அடைய மிக மிக எளிய வழியாகும்.
 ஸ்ரீ சாயியின் வாக்குறுதிகள் சத்தியமானவை, அவைகளை முழு மனதோடு நம்பிப் பொறுமையாக பின்பற்றினால் எல்லா நலனும் பெறுவீர்கள்,  இந்த ஆண்டு முதல் உங்கள் வாழ்க்கை வளமாவதற்க்கு நீங்கள் இந்த வாக்குறுதிகளை உங்களுக்கு உரியதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஜெயிப்பீர்கள்.

ஜெய் சாய்ராம்

2 comments:

  1. enaku mel ulla varigalai, eppadi seivadhu endru puriyavillai....

    ReplyDelete
  2. enaku mel ulla varigalai, eppadi seivadhu endru puriyavillai....

    ReplyDelete

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...