Sunday, February 10, 2013

பாதம் எது? சிரசு எது?




ஒரு நாள் பிற்பகல் பக்தர் ஒருவர் ரமண மகரிஷியிடம், ‘சுவாமி, எனக்கு ஒரு விருப்பம்….என் தலையினை தங்களது திருவடியில் வைத்து வணங்கிட வேண்டும்’ என்றார்.

‘ஓ அதுவா! ஆனால்…எது தலை, எது கால்?’ , என்று கேட்டார் ரமண பகவான். அன்பர் பதிலேதுமின்றி அமைதியானார்.

சற்று நேரம் கழித்து ,  ‘நான் என்ற அகந்தை உணர்வே சிரசு, அகந்தை கரையுமிடமே குருவின் பாதம்’ என்றார் ரமணர்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...