Sunday, February 24, 2013

வராத கடனும் வசூலாகும்



எங்களுடைய சீக்கிய முதலாளி கூறுகிறார்...
ஒருநாள் அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு எனது ஒரு வயது மகளின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக வீட்டில் ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். எனது அலுவலக நண்பர் ஒருவர் பிறந்த நாள் விழாவுக்காக வந்திருந்தார். அவர் சொன்னார், ’நமது அலுவலகத்திற்கு சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் வந்திருக்கிறார். இன்று வேலைக்கு வந்திருக்கும் அவரது பெயர் சோதி!’,  என்றார்.
எனக்கு உடனே மனநிலை சரியில்லாமல் போய் விட்டது. காரணம் அவர் ஒரு சரியான முரட்டுப் பேர் வழி. கோபக்காரர் எனக் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் சில நாட்களிலேயே என்னுடைய எண்ணம் சரியல்ல என்பது திரு. மகாலெ என்பவர் மூலம் தெளிவானது.
ஒருநாள் எனது பாஸ் மூட் அவுட்டாகியிருந்தார். யாரிடமும் சரியாகப் பேசவில்லை. திரு மகாலெ மட்டும் துணிந்து அவரிடம் பேசச் சென்றார். அவரையும் உள்ளே வரவேண்டாம் என்று அந்த சீக்கிய தலைமை அதிகாரி சொல்லிவிட்டார். மாலை அவருடைய கோபம் சற்று குறைந்தது. அவரது அறைக்கு மகாலெ சென்று பேச்சுக் கொடுத்தபொழுதுதான் அந்த அதிகாரி மனம் திறந்து அவரிடம் பேசினார். தான் ஒரு பண நெருக்கடியில் மாட்டிக் கொண்டிருப்பதாகவும், எந்த வழியும் தெரியவில்லை என்றும் சொன்னார்.
அதற்கு மகாலெ, தன்னிடம் அந்தப் பிரச்சினை தீர , ராமரின் அம்பு போன்ற மருந்து இருப்பதாகவும் அதை பயன் படுத்தினால் தீர்வு கிடைக்கும் என்றும் கூறினார். அதாவது தாங்கள் பாபாவிடம் வேண்டினால் தீர்வு கிடைக்கும் என்றார். அந்த தலைமை அதிகாரிக்கு இதில் உடன்பாடு இல்லை..
‘எப்படி அவர் தீர்வைத் தந்துவிட முடியும்? நீரும் எப்போது பார்த்தாலும் பாபா பாபா என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீரே!’ என கடிந்து கொண்டார்.
மகாலெ, பொறுமையுடன், ’தாங்கள்பாபாவை நம்பவில்லை என்றாலும் பரவாயில்லை. தங்கள் வீட்டில் மனைவியோ பிள்ளைகளோ பாபாவை நம்புவார்கள் அல்லவா? அவர்களை வேண்டிக் கொள்ளச் சொல்லுங்களேன்.  வீட்டில் பாபாவின் படம் சிறியளவாவது இருக்குமல்லவா? நம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்களேன்’, என்று கூறினார்.
’அப்படி வேண்டிக் கொள்ள முடியாவிட்டால் இப்போது என்னை திட்டியது போலவாவது பாபாவை குறைகூறியாவது திட்டித்தான் பாருங்களேன்!,’ என்றார்.
மறுநாள் அவர் அலுவலகம் வந்தபோது, சந்தோக்ஷமாகக் காணப்பட்டார். மகாலெவைக் கூப்பிட்டு,  ‘உன்னுடைய பாபா உண்மையிலேயே மிக அற்புதமானவர். நான் நேற்றிரவு வீட்டுக்குச் சென்றதும் பாபாவிடம் பிரார்த்தனை செய்தேன். காலை ஏழு மணிக்கு ஒரு ஆள் என் வீட்டுக் கதவைத் தட்டி என்னை அழைத்தான். நான் வெளியே வந்து பார்த்தபோது அவனுக்கு நான் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெரிய தொகையைக் கொடுத்திருந்தேன். இதுவரை அந்தத் தொகையைக் கொடுக்காமல் ஏமாற்றிக்கொண்டிருந்தான். அவனது முகத்தைக் கூட என்னால் பார்க்கமுடியவில்லை. அந்தத் தொகை வரவே வராது என நினைத்து அதைப் பற்றிய எண்ணத்தையே விட்டுவிட்டேன்.. இப்போது அந்த ஆள், என்னைத் தேடி பணத்தை எடுத்து வந்து கொடுத்துவிட்டுச் சென்றான்.. நிச்சயமாக பாபா உண்மையிலேயே மகான்தான் என்றார் அந்தசீக்கிய அதிகாரி.
பல வருடங்கள் கழித்து அந்த சீக்கிய அதிகாரியை ஓரிடத்தில் சந்திக்கநேர்ந்தது. அப்போது அவருக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்திருந்தது. அதைப் பற்றி நான் விசாரித்தேன். அதற்கு அவர் எந்தக் கவலையும் இல்லாமல் அதையெல்லாம் பாபா பார்த்துக்கொள்வார்.. அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை... பாபாவுக்கு எல்லாம் தெரியும் என்றார். பார்த்தீர்களா? சாயியைச் சாடினவர்களைக்கூட பாபா எப்படி மாற்றுவார், காப்பாற்றுவார் என்று-

சூர்யகாந்த் யாதவ், அந்தேரி

தமிழில் -  வெங்கட்ராயன்.

நன்றி் சாயிலீலை

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...