Tuesday, February 12, 2013

கணவன்மாரே கவனியுங்கள்!

                 ஒரு ஆணின் பெயர் ரேஷன் கார்டில் மட்டும் வீட்டுத்தலைவர் என்ற இடத்தில் இருந்து பயனில்லை. நிஜமாகவே, அவன் வீட்டுத் தலைவனாக இருக்க வேண்டும். சம்பாதிக்கும் பணத்தை அம்மாவிடமோ, மனைவியிடமோ ஒப்டைக்கவேண்டும். 

                      எனது கணவன் எனக்கு ஏதும் தருவதில்லை என்று ஒரு மனைவி சொன்னால் அது அந்த ஆணுக்குத்தான் கேவலம்.
               காரணம் கண வனுக்கு புருஷன் என்றும் வேறு ஒரு சொல் உண்டு. இதன் முதல் இரண்டு எழுத்தான் ‘புரு’ என்றால் நிறையக்கொடுப்பவன் என்றும் எடுக்க எடுக்க குறைவில்லாதவன் என்றும் பொருள். அதாவது குடும்பத்திற்க்கு தேவையான பொருளை கொடுப்பவன்.
                  மேலும், தேவைப்பட்டாலும் கொடுக்கத் தயாராகும் அளவு உழைப்பாளியாகத் திகழ வேண்டும். இனியாவது ’குடும்பத்தலைவன்’ என்ற பட்டத்தினை பெயரளவிற்க்கு வைத்துக் கொள்ளாமல், வீட்டிற்க்கும் ஏதாவது கொடுக்கும் வழியினைப் பாருங்க!

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...