Thursday, May 14, 2015

சத்குருவைக் காட்டிய குரு 1



சீரடி சாயி பாபாவின் புகழ் அகில இந்தியா முழுதும் பரவ முழு முதற் காரணம் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியே ஆவார். இத்தனைக்கும் அவர் சீரடி சாயி பாபாவை நேரில் பார்த்ததில்லை.
அவர் கூறுகிறார்: “ நான் ஒரு சத்குருவைத் தேடி இந்தியாவின் நான்கு திசைகட்கும் சென்றேன். ஓரிடத்திலும் நிற்காமல் அலைந்து திரிந்துக் கொண்டிருந்தேன். அநேக இடங்களுக்கும் சென்றேன். அநேக ஞானிகளைக் கண்டேன்.
1936ம் ஆண்டு (சாயி பாபா சமாதியடைந்து 18 ஆண்டுகள் கழித்து) சீரடிக்கு வந்து சாயி பாபா சமாதியை நேருக்கு நேராக காணும் வரை என்னுடைய ஆன்மீக தாகம் அடங்கவில்லை.  சீரடிக்கு வந்தேன். அங்கு என் இதயத்தில் அவரைக் கண்டேன்.
அவர்தான் என் தேடுதலை நிறுத்தினார்.  சீரடியில் நான் என்னால் எவ்வளவு எடுத்துக்கொள்ள முடியுமோ அதற்குப் பன்மடங்கு அதிகமாகவே பெற்றேன்.  கடைசியில் என் சத்குருவினை கண்டுகொண்டேன். அவர்தான் சத்குரு சாயிநாதர். அவருடன் நான் நிரந்தரமாக தொடர்பு கொண்டிருக்கிறேன்”.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...