Sunday, May 31, 2015

ஸ்ரீ சாயி நாதனின் கருணை!




நான் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து பதவி உயர்வில் வெளியூருக்கு மாறுதல் செய்யப்பட்டேன். அங்கு பணியில் சேர்ந்த பிறகு நான் சந்தித்த இன்னல்கள் பல. நிறுவனத் தலைவருக்கு என்னைக் கேலி கிண்டல் செய்வதே பொழுதுபோக்காகிவிட்டது.
நான் இந்த நிலையை நினைத்து மிகவும் வேதனைப்பட்டேன். தற்கொலை செய்துகொள்ளலாமா என்று கூட முடிவு செய்தேன். ஆனால் சாயி நாதன் தனது அதிஅற்புதத்தை நடத்தி அந்த நிறுவனத் தலைவரை, நான் பணியில் சேர்ந்த ஒரே மாதத்தில் வேறு நிறுவனத்திற்கு மாறுதல் செய்து விட்டார்கள்.
பின்னரும் அந்த நிறுவனத்தில் புதியதாகப் பணியில் சேர்ந்த நிறுவனத் தலைவராலும், வேறு ஒருவராலும் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது. இதன் காரணமாக ஏதோ ஒரு சமாதானத்தை தெரிவித்து விடுமுறையில் சென்றுவிட்டேன்.
நிறுவனத் தலைவர் என்னைப் பற்றி தலைமையக உயர் அலுவலருக்குக் கடிதம் அனுப்பி என் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துவிட்டார்.
நான் தலைமையக உயர் அலுவலரை சந்தித்து என் நிலையை எடுத்துக் கூறினேன். அவர் என் மீது கோபப்பட்டு, உனக்கு காலதாமதமாகத்தான் வேலை வழங்கஇயலும் எனத் தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் நான் சாயிநாதனை மனதார வேண்டிக்கொண்டேன். சாயி நாதா! எனக்காக எத்தனையோ அற்புதங்களைச் செய்திருக்கிறாய்.. எனக்கு மீண்டும் விரைவில் வேலைக் கிடைக்கவும், விடுமுறை சம்பளம் கிடைக்கவும் நீதான் வழி செய்யவேண்டும் என்றும், எனக்கு கிடைக்கவேண்டிய இரு மாத சம்பளத்தை கீரப்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளப் போகும் பாபா திருக்கோயிலுக்கு அளிக்கிறேன் என்றும், இந்த நிகழ்வுகளை சாட்சியாக  ஸ்ரீ சாயி தரிசனம் இதழில் எழுதுவதாகவும் வேண்டிக் கொண்டேன்.
பெருங்களத்தூர் பாபா கோயிலிலும் வந்து வேண்டிக்கொண்டேன். அங்கு எனக்காகப் பிரார்த்தனையும் செய்யப்பட்டது.
ஒரு மாதம் கழித்து சாயி அருளால், வேறு ஒரு ஊரில் உள்ள நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டது. என் மீது குறை தெரிவித்து தலைமையக உயர் அதிகாரிக்கு கடிதம் எழுதிய நிறுவனத் தலைவரும் அங்கு நீடிக்காமல் ஒரே மாதத்தில் வேறு நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு விட்டார்.
எல்லாம்  ஸ்ரீ சாயி நாதனின் கருணையே ஆகும்.
சாயி தாசன்
சுப்பிரமணியபுரம்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...