Monday, May 18, 2015

ஒரே குறிக்கோள்

1936 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இருபத்தி ஒன்பதாம் தேதியன்று சாயி பாபாவிடம் இருந்து தனக்கு கிடைத்த பொக்கிஷத்தை அனைவருக்கும் தர நரசிம்மசுவாமி முடிவு செய்தார் . அந்தக் காலத்தில் அவர் உபாசினி மகராஜ் , ரமண மகரிஷி ஆசிரமம் போன்ற இடங்களில் இருந்த பொழுது அவருடன் இருந்தவர்களில் ஒருவர் சுத்தானந்த பாரதி ஸ்வாமிகள் என்பவர் . அவருக்கு நரசிம்மசுவாமிகளுடைய முகத்தில் இருந்த தேஜசும் , சாந்த குணமும் மிகவும் பிடித்து இருந்தது . அவர் பாபாவுடன் சீரடியிலும் தங்கி இருந்தவர் .
     அவருக்கு ராமாயணம் , மகாபாரதம் , பாகவதம் , குரான் மற்றும் கிறிஸ்துவர்களின் பைபிள் போன்றவை அத்துப்படி . அது மட்டும் அல்ல அவர் சிறிது காலம் ராமகிருஷ்ணர் , விவேகானந்தர் போன்றவர்களுடன் கல்கத்தாவில் இருந்துள்ளார் . பத்ரிநாத் , கேதார்நாத் , காசி , ஹரித்துவார் , ரிஷிகேசம் போன்ற இடங்களுக்கும் சென்று வந்தவர் . அவர் நரசிம்மசுவாமி ஆன்மீக ஞானம் தேடி வரும் முன்னரே அதற்காக அலைந்து கொண்டு இருந்தவர் .
     அத்தனை இருந்தும் அவருக்கு ஆன்மீக ஞானம் கிடைக்கவில்லை . ஆன்மீக ஞான ஒளிகளான சாயி பாபா , உபாசினி மகராஜ் போன்றவர்களுடன் இருந்தும் ஏனோ அவருக்கு அந்த ஞானம் கிடைக்கவில்லை என்பதினால் மனம் வருந்தி அது குறித்து உபாசினி மகராஜிடம் கூறிவிட்டு , சாயி பாபாவின் அருளினால் நரசிம்மசுவாமிக்கு அந்த பரிசு கிடைத்ததிற்கு பெருமைப்படுவதாகக் கூறினார் . உபாசினி மகராஜ் அவருக்கு எந்தப் பதிலும் தரவில்லை . அன்று இரவு அதற்கு பதில் தருவதாகக் கூறி அவரை இரவு விருந்திற்கு அழைத்தார் .
     இரவு வந்ததும் சுத்தானந்த பாரதி விருந்திற்குச் சென்றார் . அவர் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்ததினால் நன்கு கவனிக்கப் பட்டார் . நன்கு வயிறு முட்ட உணவு அருந்தினார் . உபாசினி மகராஜ் அதில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவருக்கு நிறைய இனிப்பு வழங்கி சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினார் . சாப்பிட்ட பின் சுத்தானந்த பாரதியால் எழுந்திருக்ககூட முடியவில்லை . அத்தனை சாப்பிட்டு இருந்தார் . அவருக்கு எழுந்திருக்க மற்றவர் உதவ வேண்டி இருந்தது . இரவு சுத்தானந்த பாரதியால் உறங்கக்கூட முடியவில்லை . வயிற்று வலி , வயிற்றுப் போக்கு என இரவெல்லாம் உறங்க முடியாமல் அவதிப்பட்டார் .
     மறுநாள் அவரைக் காண வந்த உபாசினி மகராஜ் அவரிடம் கேட்டார் , என்ன நன்கு உறங்கினிர்களா ?.  
     சுத்தானந்த பாரதி கூறினார் , உறங்கினிர்களாவா ? இரவெல்லாம் வயிற்று போக்கு , வயிற்று வலி . அவதிப்பட்டேன் . என்னால் இப்போது நிற்கக்கூட முடியவில்லை .
     சுத்தானந்த பாரதி அவரிடம் என்னுடைய நேற்றைய கேள்விக்கு இன்னமும் விடை தரவில்லையே . எத்தனையோ புலமை பெற்ற எனக்கு ஏன் ஆத்ம ஞானம் கிடைக்கவில்லை ?
      உபாசினி மகராஜ் சிரித்தபடிக் கூறினாராம் , 'உன்னுடைய இந்த நிலையே உனக்கு பதிலாக இருக்குமே . உன் மனதில் ஒரே குறியை நோக்கிச் செல்லும் எண்ணம் இல்லை . நிறைய படித்து என்ன பயன் ? என்ன செய்யவேண்டும் என மனதில் ஒரு தீர்மானமான குறிகோளை வைத்துக் கொள்ளவில்லையே . நீ பெற்ற பெரும் கல்விகள் அதனால்தான் வயிற்றுப்போக்கு போல ஆகிவிட்டது . அதனால்தான் உன்னால் ஞானம் பெற முடியவில்லை. நரசிம்மசுவாமிக்கு மனதில் தனக்கு ஆன்மீக ஞானம் கிடைக்க சத்குரு வேண்டும் என்ற ஒரே ஒரு குறிக்கோள்தான் இருந்தது . சுமார் பதினோரு வருட முயற்சியினால் அவரால் அந்த குறிக்கோளை எட்ட முடிந்தது . சாயி பாபா அவருக்கு அதைத் தந்தார்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...