Sunday, December 2, 2012

விரதம் இருப்பது பலன் தருமா?



விரதம் இருப்பது பலன் தருமா?

நான் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறேன். விரதம் இருந்தேன். சீரடிக்கும் போய் வந்தேன். அப்படியிருந்தும் எனது பிரார்த்தனைக்கு இன்னும் பாபா பலன் எதையும் தரவில்ல்லையே ஏன்?

-          என். உமாதேவி., மதுரை



        ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காலம் உள்ளது. கீரை விதைத்தால் பத்துப் பதினைந்து நாட்களில் பலன் தரும். காய்கறிகளைப் போட்டால் மூன்று மாதமாகும். பொன்னி போன்ற விதை விதைத்தால் ஆறு மாதமாகும். வாழை பயிரிட்டால் பலன் கிடைக்க ஒரு வருடமாகும். தென்னையைப் போட்டால் ஐந்து வருடமாகும்.



       உங்கள் பிரச்சனைக்கு ஏற்பத்தான் பலனும் கிடைக்கும். பத்து லட்சம் கடனை வாங்கிவிட்டு பத்துப்பைசா இல்லாமலும், அதைப் பெறும் வழியினைத் தேடாமலும் விரதமிருந்து கூரையினை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி பலன் கிடைக்கும்?



       கடவுள் மீது நம்பிக்கை வைத்து அதற்கான கால நேரத்தை அவர் உருவாக்கித் தரும்வரை பொறுத்திருந்தால் பலன் கிடைக்கும். அல்லது வேண்டியதைப் பெறவேண்டும் என்ற மன உறுதியாவது இருக்கவேண்டும்.







                                                     - சாயி வரதராஜன்

ஸ்ரீ சாயி தரிசனம் அக்டோபர் 2012 இதழில்

வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...