Saturday, December 8, 2012

கண் கண்ட தெய்வம் கை கொடுப்பார்!



சாயிலதா
               

              என் பெயர் சாயி லதா. சென்னையில் வசித்து வருகிறேன். 2006 முதல் தான் பாபாவுடனான எனது பயணம் தொடங்கியது.  இந்த ஆறு வருடத்தில், 2009ல் இருந்து பாபா என்னிடம் காட்டிய அன்பும், கருணையும் அளவிடமுடியாது. பல அனுபவங்கள்.  ஒவ்வொரு நிலையிலும் அவர் என்னுடன் இருப்பதை நிரூபித்து வந்தார்.


              பாபாவின் உதியினுடைய மகிமையை நான் சத் சரித்திரத்தில் படித்து அறிந்துக்கொண்டிருந்தேன். என் நிஜ வாழ்க்கையில் நான் அறிந்த இந்த உதியின் மகிமை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


             2010 நவம்பரிலிருந்து என் கணவருக்கு மூட்டு வலி இருந்து வந்தது.  டிசம்பர் 31 ம் நாள் டாக்டரிடம் சிகிச்சைக்காக சென்றபோது ருமடாய்டு என்ற நோய் இருப்பதாகவும் அதற்காக எம்.ஆர்.ஐ ஸ்கேன் மற்றும் பல பரிசோதனைகளும் செய்யவேண்டும் என்றும் சொன்னார்கள்.
நாங்களும் எல்லா சோதனைகளையும் செய்து பார்த்தோம். மருத்துவர்கள் சில மருந்துகளை எழுதித்தந்தார்கள்.  வாரம் 750 ரூபாய்க்கு மருந்து மாத்திரைகள்.  ஆனால் என் கணவர் அவ்ற்றில் ஒன்று கூட சாப்பிடவில்லை. வலி அதிகமாகும் போதெல்லாம் அருகிலுள்ள மருந்துக்கடையில் வலி நிவாரணி வாங்கி சாப்பிடுவார். வலி குறைந்துவிடும்.


          மருத்துவர் ஒருமுறை பரிசோதித்துவிட்டு, சிறுநீரக செயல்பாட்டில் பிரச்சனை இருப்பதாகவும் அதற்க்கு அவர் எடுத்த வலி நிவாரண மாத்திரைகள்தான் காரணம் என்று கூறி வேறு சில மாத்திரைகளை எழுதிக்க்கொடுத்தார். அதுவும் தற்காலிக நிவாரணம் தான் தந்தது. சில நாட்களில் பிரச்சனை அதிகமாகும். பிறகு வேறு மருத்துவர்களை நாடினோம். அங்கும் பலன் தெரியாத நிலையில் எங்களது பிரச்சனையை பாபாவிடம் ஒப்படைத்தோம்.
 
               நான் தினமும் காலையில் அவர் குடிக்கும் காபியில் பாபாவிடம் பிரார்த்தனை செய்து ஒரு துளி உதியினை அதில் சேர்த்து கொடுத்து வந்தேன். பிப்ரவரி மாதத்திலிருந்து ஒன்பது வாரங்கள் மயிலாப்பூரிலுள்ள பாபா ஆலயத்திற்க்கு நடந்து செல்வேன்.
 
                 ஏப்ரல் கடைசியில் மறுபடியும் ஸ்கேன் செய்து டாக்டரிடம் காண்பித்தபோது டாக்டர் மிகுந்த ஆச்சரியத்துடன் அவரது இரண்டு கிட்னியும் சரியாகி பழையபடி இயங்க ஆரம்ம்பித்துவிட்டது என்று கூறினார்.  அவர் கொடுத்த அதே மருந்தை தொடருமாறு ஆலோசனையும் கூறினார். ஆனால் அவர் தந்த மாத்திரை ஒன்று கூட சாப்பிடாமல் பாபா உதியினால் மட்டுமே குணமடைந்தார் என்பதை நாங்கள் டாக்டரிடம் தெரிவிக்கவில்லை.


               இது என் கணவருக்கும், எனக்கும், பாபாவிற்க்கும் மட்டுமே தெரிந்த அற்புதம். அன்று முதல் இன்று வரை என் கணவருக்கு கிட்னி பிரச்சனையும் இல்லை. மூட்டு வலியும் இல்லை. நல்ல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.


             எனக்கு கடன் தொல்லை இருந்தது. பாபாவிடம் வேண்டினேன். எதிர்பாராதவிதமாக விஜய் தொலைக்காட்சியில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. அதில் பன்னிரண்டு லட்ச ரூபர்ய் பரிசும் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக எனது கடனை அடைக்கவும் பாபா உதவி செய்தார்.
 
           பாபாவின் அற்புதங்கள் மேலும் மேலும் என் வாழ்வில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கண் கண்ட தெய்வம் பாபா கை கொடுப்பார் என்பதற்க்கு அவர் எனக்குச் செய்த, செய்து வரும் அற்புதங்களே சாட்சி.

ஸ்ரீ சாயி தரிசனம் செப்டெம்பர் 2012 இதழில் வெளியான ஒரு சாயி பக்தையின் அனுபவம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...