Friday, December 14, 2012

பூர்வ கர்மா – நம்பிக்கை – பொறுமை



பூர்வ கர்மா நம்பிக்கை பொறுமை

       1941ம் ஆண்டு வாக்கில் சங்கமேசன் என்பவர் சந்தித்த சாது ஒருவர், அவரிடம் சாயிபாபா ஒரு தெய்வீகப்பிறவி என்றும் தன் பக்தர்களை ஒரு போதும் கைவிடமாட்டார் என்றும் கூறியுள்ளார். பின் சங்கமேசனிடம் ஒரு பாபா படத்தினை அளித்து தினமும் அப்படத்திற்க்கு பூஜை செய்யச் சொல்லியுள்ளார்.

     அப்படி பூஜித்து வரும்போது ஆரம்ப காலத்தில் அவருக்கு மனத்துயரங்கள், பணியில், வீட்டில் பிரச்சனைகள் என பல்வேறு இன்னல்களை அனுபவிக்க நேரிடும் என்றும் அந்தச் சாது கூறியுள்ளார். ஆனால் பக்தியோடும், உணர்வு பூர்வமாகவும் பூஜைகளைச் செய்து வந்தால், பாபா அவருடைய உலகாயத முன்னேற்றத்தையும் ஆன்மீக ரீதியான் முன்னேற்றத்தினையும் தாமே அளித்து பாதுகாப்பார் என்றும் அந்தச் சாது கூறியுள்ளார். சாது கூறியதை ஏற்று அவ்விதமே சங்கமேசன் நித்ய பூஜை செய்து வந்தார்
        அதே நேரத்தில் சாது கூறியதைப்போல எல்லாவிதத்திலும் தாங்க முடியாத இன்னல்களை அனுபவித்துள்ளார். ஒரு காலக்கட்டத்தில் மிகுந்த கஷ்டத்தின் காரணமாக சாது கூறிய வார்த்தைகள் மீதும், சாயி மீதும் நம்பிக்கையினை இழந்து, மனம் தளர்ந்து விரக்தியான நிலையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் அமர்ந்திருந்தார். அப்போது கோயிலுக்கு எதிரிலுள்ள அனைந்திந்திய சாயி சமாஜ கட்டிடத்திற்க்குச் சென்று பூஜ்ய ஸ்ரீ நரசிம்ம சுவாமிகளை சந்தித்து தனது துயரங்களையும் இன்னல்களையும் மனம் விட்டுக்கூறியுள்ளார்.
         சுவாமிஜீ, சங்கமேசனிடம், பாபாவின் மீதான் நமது நம்பிக்கையும், அவருக்கு பூஜைகள் புரிவதும் நாம் பூர்வ ஜென்மங்களில் செய்த பாவங்களை நீர்த்துப் போகச் செய்யப் பயன்படுகிறது.  பூர்வ கர்ம வினைப் பயன்களில் இருந்து யாருமே தப்பிக்க முடியாது.  நீங்கள் அனுபவிக்கும் துன்பங்கள் எல்லாம் காலப்போக்கில் மறைந்து விடும்.  ஒரு விதையினை விதைக்கும் போது அதன் பலன்களை உடனடியாக எதிர்பார்க்க முடியாது. நீங்கள் பொறுமையோடு காத்திருக்கவேண்டும்.  சில சமயங்களில் வருடக்கணக்கில் கூட காத்திருக்க நேரிடலாம். தவிரவும் பழங்களை அளிக்க உள்ள மரங்களை வெட்டிவிடவும் கூடாது.  அந்த மரம் பழங்களை அளிக்கத் தொடங்கிவிட்டால், நீங்கள் மட்டுமல்ல, உங்கள் பகுதியிலுள்ள அனைவரும் அதனால் பயனடைவர்என்று தெரிவித்தார்.
          சங்கமேசன் பாபாவிற்க்கான நித்ய பூஜைகளை தொடர்ந்து செய்து வந்தார்.  1965ம் ஆண்டிலிருந்து ஸ்ரீ சாயி பாபா சங்கமேசன் அவர்களிடம் பேசத்தொடங்கினார்.  நூற்றுக்கணக்கான மக்கள் பாபா மூலமாக தங்கள் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்வதற்காக சங்கமேசனிடம் வரத்தொடங்கினர்.  பாபாவின் சக்திகள் அபாரனவை என்றும் அவருடைய லீலைகளை அனுபவித்துத்தான் உணரமுடியும் என்பதையும் சங்கமேசன் தெரிந்துகொண்டார்.

                                         நன்றி:அற்புதப்புத்தகம்
                                     சிவ.கனகசபை, தஞ்சாவூர்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...