Sunday, December 2, 2012

கோடி நன்மை தரும் கூட்டுப்பிரார்த்தனை



      கோடி நன்மை தரும் கூட்டுப்பிரார்த்தனை

        நமக்குத் தொடர்கதையான கஷ்டத்திற்க்கு காரணம் கடவுளை வணங்கும் வழிமுறையினை முறையாக பின்பற்றாமல் போனது.



        இறைவனுடன் மனம் விட்டுப்பேசுவதுதான் வேண்டுதல். இதை அறியாமல் பிரச்சனை காலத்தில் துவண்டுவிடுகிறோம். இறைவனுடன் நெருக்கமாக இல்லாத நிலையில் நமக்கும் பகவானுக்கும் இடைவெளி ஏற்படும். இதனால் பிரச்சனைகள் வரும்போது நம்மால் நெகடிவ் சக்திகளை எதிர்த்து போரிட இயலாத நிலையும், தெய்வ பலம் கிடைக்காத நிலையும் தொடருகிறது.

        பிரார்த்தனை செய்யும்போது அவரை நெருங்குகிறோம். அவ்வாறு நெருங்கும் போது உடனடியாக நம் கோரிக்கைகளுக்கு பதில் தருகிறார். இதை நன்றாக புரிந்துகொண்ட கிறிஸ்துவர்களும் முஸ்லிம்களும் பிரார்த்தனை செய்வதை தமது முக்கியக் கடமைகளுள் ஒன்றாக வைத்திருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை மூலமாகவே பல காரியங்களை சாதித்துக்கொள்வதோடு, பெருமளவில் இந்துக்களை மத மாற்றம் செய்துவிடுகிறார்கள்.

       கிறிஸ்துவனான பிறகு காலை, மாலை, இரவு என பிரார்த்தனை செய்பவனாகவும், கடவுள் பற்று உள்ளவனாகவும் மாறும் ஒருவன், இந்துவாக இருந்த காலத்தில் செய்திருந்தால் பகவான் பதில் தந்திருக்கமாட்டானா?  நிச்சயம் தந்திருப்பான். அவன் அவ்வாறு செய்யாமல் போனதற்குக் காரணம், அறியாமை, பிரார்த்தனை பற்றி அவனுக்கு உணர்த்திச் சொல்லித்தர நம்மிடையே ஆட்களில்லை.

        உண்மையான நம்பிக்கை மற்றும் விசுவாசத்துடன் பிரார்த்தனை செய்தால் எப்படிப்பட்ட பிரச்சனையும் விரைவில் தீர்ந்து போகும். எந்த நேரத்திலும் கடவுள் கைவிடமாட்டான் என ஆணித்தரமாக நம்புவதே விசுவாசம்.

        இத்தகைய நம்பிக்கை ஊட்டி எந்த பிரச்சனை வந்தாலும் எல்லவற்றுக்கும் தீர்வு உண்டு என்பதை அனுபவப்பூர்வமாக கற்றுத்தரவும், பல நல்ல ஆத்மாக்கள் சேர்ந்து கஷ்டப்படுவோருக்காக பிரார்த்தனை செய்யவுமே பெருங்களத்தூரில் சீரடி சாயி பாபா பிரார்த்தனை மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

        இங்கு நடக்கும் கூட்டுப்பிரார்த்தனையில் எண்ணற்ற அற்புதங்கள் நடக்கின்றன. சாயி பாபா பிரார்த்தனை மையத்தில்,  பிரார்த்தனைக்குத் தான் முதலிடமே  தவிர, பூஜை புனஸ்காரங்களுக்கு அல்ல.

        வாழ்க்கை மேன்மையுற, நமக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்பவர்களை ஊக்குவிக்க, பிறருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்ள நமக்கு மனப்பக்குவம் வேண்டும். இந்த பக்குவம் தரும் இடமாக புதுப்பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் உள்ளது. சர்வ சக்தியுள்ள சாயியிடம், பிறருக்காக பிரார்த்தனை செய்வதையே வாழ்க்கையாக வைத்திருக்கிற சாயி வரதராஜன் அருகிலிருந்து கூட்டுப்பிரார்த்தனையை நடத்துகிறார். அற்புதங்களின் அணிவகுப்பினை ஆயிரக்கணக்கானோர் அனுபவித்து செல்கிறார்கள்.

         நீங்களும் இதில் இலவசமாக பங்கு பெறலாம். பெருங்களத்தூர் சீரடி சாயி பாபா தியான மையத்தில் உங்கள் பிரார்த்தனையையும் வைக்கலாம். பாபா செய்யும் அற்புதத்தினை நீங்களும் அனுபவிக்கலாம். இதுவரை வாழ்வில் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்திருக்கிறேன் என்பவர்களும்,  கோரிக்கை வைத்து இது வரை ஏதும் நடக்கவில்லை என்பவர்களும் ஒருமுறை இம் மையத்திற்க்கு வந்து பிரார்த்தனை செய்துவிட்டு செல்லுங்கள். உங்கள் வாழ்க்கை மாறுவதை நீங்களே கண்கூடாக காண்பீர்கள்.
                       ஜெய் சாயிராம்

விபரங்களுக்கு

ஷீரடி சாயி பாபா பிரார்த்தனை மையம்

கல்கி தெரு, (கிருஷ்ணா ரோடு அருகில்),

புதுப்பெருங்களத்தூர்,

சென்னை 600 063.

அலைபேசி: 90940 33288.



         தாம்பரம் காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் தாம்பரத்திற்க்கு அடுத்து பெருங்களத்தூர் உள்ளது. மின் தொடர் வண்டி ரயில் நிலைமும் உள்ளது. நெடுஞ்சாலையில் இருந்து மின் தொடர் வண்டி ரயில் நிலையத்தினை கடந்து நடந்து சென்றால் ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தூரம்தான்.

         வயோதிகர்கள், குழந்தைகளுடன் வருபவர்கள் ஆட்டோவில் செல்லலாம். மற்றவர்கள் சாயி நாமத்தினை உச்சரித்தபடி நடக்கலாம்.

                             ஜெய் சாயிராம்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...