Wednesday, December 12, 2012

ஆரத்தி தட்டில் தெரியும் பலன்கள்



ஆரத்தி தட்டில் தெரியும் பலன்கள்

நெய் தீபம் ஏற்றி ஆரத்தி காடுகிற தோரணையை வைத்தே ஒருவர் நிலையை கூறலாம்.  தீபம் ஆடாமல் நேராக நிற்கும் அளவிற்க்கு பொறுமையாக திருமுகம், பாதத்தினை நோக்கி ஆரத்தி காட்டுபவர், உறுதியான மனம் படைத்தவர். இவர் இறைவன் மீது அதிக நம்பிக்கை உள்ளவர். எனவே, இவரது வேண்டுதல் மிக விரைவில் நடந்தேறும்.

வேகமாக ஆரத்தி தட்டினை சுற்றுபவர் அவசரக்காரர்.  இவருக்கு எதுவும் கை கூடாது. கை கூடினாலும் இழந்து விடுவார்.

ஆன்ட்டி கிளாக் வைஸ் என்கிற வலமிருந்து இடமாக ஆரத்தி தட்டினைச் சுற்றுபவர் எவ்வளவு முன்னேறினாலும் சீக்கிரமாக கீழே வந்திவிடுவார்.

பகவானின் திருமுகத்தினை இடிப்பது போல் ஆரத்தி காட்டுபவர் தன் செயலால் குடும்பத்தில் கஷ்டத்தினை அனுபவித்து வருபவர்.

அகலமாக கையினை விரித்து ஆரத்தி காட்டுபவர் ஊதாரித்தனம் மிக்கவர். எளிதில் கடன் படுபவர்.

இதில் நீங்கள் எப்படி என்பதை கவனித்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். பலன் பெறுங்கள். இது சாயி வரதராஜன் கண்டறிந்த அனுபவ உண்மையாகும்.

                                     -சாயி வீரமணி, சென்னை

ஸ்ரீ சாயி தரிசனம் அக்டோபர் 2012 இதழில் வெளியானது

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...