Saturday, December 17, 2016

ஆனந்த மழையாய் வா சீரடி பாபா





 
விதியாலும் மதியாலும்
சதியாலும் இங்கே
விளைவுகள் கோடி கோடி
அலைந்தோமே கலைந்தோமே
தொலைந்தோமே நாங்கள்
வழிதனை தேடி தேடி
யாரிடம் சொல்வது
யாரிடம் செல்வது
எங்களுக்கு ஏது கதி !
யாரிங்கு உண்மையாய் ?
யாரிங்கு வன்மையாய் ?
உன்னிடம் சரணாகதி !
சீராக்கு எம்வாழ்வை சீரடி பாபா !
சிறப்பாக்கு எம்வாழ்வை சீரடி பாபா !
ஆகாயம் நீதானே சீரடி பாபா !
ஆனந்த மழையாய் வா சீரடி பாபா !

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...