Friday, December 2, 2016

சத்சரித்திரத்திலிருந்து



சத்சரித்திரம் 43வது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அவர் தெரிவது இல்லை. நம்பிக்கை உள்ளவர்களுக்கு அவர் எங்கிருந்தாலும் தரிசனம் தருவார். மக்களுடைய மனச்சாய்வு எப்படியோ அப்படியே நேரிடை அனுபவம் ஏற்படுகிறது.
சாவடியில் ஒளிந்த ரூபம், மசூதியில் பிரம்ம ரூபம்., சமாதியில் சமாதி ரூபம், மற்றெல்லா இடங்களிலும் சுக சொரூபம்.
ஆயினும், தற்சமயத்தில், சமர்த்த சாயி இங்கு வாசம் செய்வதற்கு பங்கம் ஏதும் நேரவில்லை என்பதிலும் அவர் இங்கு என்றும் அழிவின்றி அகண்டமாக நிலைத்திருப்பார் என்பதிலும் பக்தர்கள் அசைக்கமுடியாத நம்பிக்கையும் விசுவாசமும் வைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...