Thursday, July 10, 2014

நில், கவனி, செல்!

சாயி பக்தர்களாகிய உங்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்க வேண்டும் அது வெளியிலும் தெரியவேண்டும்.

பிறரது நோக்கம் நிறைவேற எங்கெங்கோ ஓடுவார்கள் எதைஎதையோ தேடுவார்கள். ஆனால் நீங்களோ சாயியைத் தவிர வேறு எங்கும் ஓடவும் வேண்டாம், எதையும் தேடவும் வேண்டாம். பாபா சொன்ன விக்ஷயங்களை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எனனையே உங்களது எண்ணங்கள், செயல்கள் இவற்றின் ஒரே குறிக்கோளாக அமைத்துக் கொள்ளுங்கள்.

திட்டமிட வேண்டுமா? வெற்றி பெற வேண்டுமா? கொடுத்தது கிடைக்க வேண்டுமா? குழந்தைப் பேறா? எதுவானால் என்ன? அவற்றைப்பற்றி அதிகமாக யோசிக்காதீர்கள். சாயி சாயி என்று சொல்லி, சாயியை அடைவதில் மட்டும் முனைப்புக்காட்டுங்கள். அனைத்தும் தாமாக வரும். பாபா சொன்னது ஆன்மீகத்துக்குத் மட்டுமல்ல, வாழ்வுக்கும் பொருந்தும்.

லவுகீகத்தில் இருந்துதான் ஆன்மீகத்திற்கு பாபா அழைத்துச் செல்கிறார். வெற்றியைத் தராமல் நீங்கள் அவர் பின்னால் போகமாட்டீர்கள். அவராலும் உங்களை அழைத்துச் செல்ல முடியாது என்பது அவருக்கே தெரியும்.

இந்த மசூதியில் அமர்ந்துகொண்டு உண்மையையே பேசுகிறேன், உண்மையைத் தவிர வேறு எதையும் பேசுவதில்லை. தர்கா என்பது அடக்கம் செய்யப்படுகிற இடம், மசூதி என்பது தொழுகைக்கு உரிய இடம்.

இந்த மசூதியிலிருந்துகொண்டு என்று பாபா சொல்லும்போது, எந்த மசூதி என திகைக்காதீர்கள். உங்கள் மனதில் அவர் வசிப்பதால் உங்கள் மனமே அவரது மசூதியாகும். நீங்கள் பார்க்கிற அவரது புத்தகத்திலிருந்து, புத்தகம் மூலமாக அவர் உண்மையைப் பேசுகிறார். என்ன பேசுகிறார்?

உங்கள் குருவாகிய என்னிடத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை, ஆழமான அன்பு கொள்ளுங்கள். இதைத் தவிர வேறுவழிபாடு வேண்டாம். குருவே கடவுள் என்பதில் உறுதியாக நில்லுங்கள். மனித நிலையைக் கடந்த சத்குருவான நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்கிறார்.

எதிர்ப்பதற்கு அல்ல, பொறுப்பதற்கே தைரியம் வேண்டும். உறுதியான நம்பிக்கை வேண்டும். இன்று கிடைக்கும் என்றிரு. இன்று கிடைக்காவிட்டால் நாளை கிடைக்கும் என்று எதிர் பார்த்திரு. நாளையும் கிடைக்காவிட்டால் மறுநாள் கிடைக்கும் என எதிர் பார். உனது எதிர்பார்ப்பைத் தாண்டினாலும் கிடைக்காத போது ஒருநாள் கிடைக்கும் என்றிரு…நிச்சயம் கிடைக்கும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...