Wednesday, July 9, 2014

கீரப்பாக்கம் கிரிவலம்!

bigsai



உங்களுடைய ஆசியாலும், கைங்கர்யத்தாலும் வண்டலூர் – கண்டிகை மார்க்கத்தில் அமைந்துள்ள கீரப்பாக்கத்தில் பாபா ஆலயம் எழும்பி வருகிறது. சிவனடியார்கள் சேர்ந்து காசி விஸ்வநாதருக்கு ஓர் ஆலயம் அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை எழுப்பினார்கள். ஏற்கனவே, மலையில் விநாயகருக்கு ஆலயம் அமைந்து வருகிறது. இதனோடு, சிவாலயம் எழுப்பிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சென்ற வைகாசி மாதம் பவுர்ணமி தினத்தில் 12-06-2014 அன்று முதன்முறையாக மாலை வேளையில் கிரிவலம் துவக்கப்பட்டது. கிரிவல யாத்திரையின் போது பல்லக்கு தூக்கி வரப்பட்டது. பாபா ஊர்வலமாக வீதி வீதியாக வந்து மக்களின் ஆரத்தியை ஏற்றுக்கொண்டார்.
12-07-2014 அன்று மாலை கீரப்பாக்கத்தில் கிரிவலம் நடைபெறுகிறது. பக்தர்கள் திரளாகக் கலந்து கொள்ளலாம். தாம்பரம், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதி உண்டு.
கிரிவலத்திற்கு வருக வருக அன்புடன் அழைக்கிறோம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...