எல்லா மனிதரும் மும்மூர்த்திகளின் அம்சம்தான் என்கிறார் எனது நண்பர். இது எப்படி எனக் கூறமுடியுமா? அடுத்து, நாம் எப்போது கடவுளாகலாம்?
( ஆ.குணசேகரன், செங்கம்)
மூவித குணங்கள், செயல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவர்களாக இருக்கிறோம். எந்த ஒன்றையும் உருவாக்கவும், காக்கவும், அதனைப் போக்கவும்கூடிய சக்தி நம்மிடம் மட்டுமே உள்ளது.
ஆகவே, நாம் மும்மூர்த்திகளின் அம்சம் என்பது உண்மை. அன்பே சிவம் என்கிறோம். அந்த அன்பை உருவாக்கி, காத்துக்கொள்ளும்போது நாம் கடவுள் ஆகிறோம்.
No comments:
Post a Comment