Thursday, July 10, 2014

சாயிபாபாவின் ஆரத்தி

3509e-topnews_1301550962_ele

ஆரத்தி எடுப்போம் ஸ்ரீசாயி உமக்கே
ஆரத்தி எடுப்போம் வியாழக்கிழமையுமே
பரமானந்த சுகத்தினை அளிப்பாயே
தயையுடன் எமக்கருள் செய்வாயே
துக்க, சோக, சங்கடம் தீர்த்தருள்வாயே
வாழ்வில் ஆனந்தம் பொங்க அருள்வாயே
என் மனதில் உன்னை நினைத்ததுமே
அக்கணமே வந்து அநுபவம் தந்தாயே
உந்தன் திருஉதி நெற்றியில் இட்டதுமே
அனைத்து தொல்லைகள் தொலைந்தனவே
சாயி நாமமே தினமும் ஜபித்தோமே
நொடியிலும் உம்மை யாம் பிரியோமே
வியாழக்கிழமை உன்னை பூஜித்தோமே
தேவா! உன் கிருபையால் நலம்அடைந்தோமே
ராம, கிருஷ்ண, ஹனுமான் ரூபத்திலே
அழகு தரிசனம் எமக்களிப்பாயே
பல மத முறையில் பூஜித்துமே
பக்தர் குறை கேட்டருள் புரிவாயே
சாயியின் நாமம் வெற்றி நல்கிடுமே
தேவா! வெற்றியின் அர்த்தம் நீதானே
சாயிதாஸனின் ஆரத்தி பாடுபவனுமே
சர்வ சுகம், சாந்தி வளம் பெறுவானே.  (ஆரத்தி)

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...