Wednesday, July 9, 2014

ஏன் அங்கெல்லாம்.....

baba2

அடிக்கடி சமாதிகள், சுடுகாடு போன்றவற்றின் பக்கம் நீங்கள் தென்படுவதாகக் கூறுகிறார்கள். இது எதற்காக?

( என். கோசல்ராம், கோவை)

இந்த உலகத்தில் எத்தனையோ ஆண்டுகளை நல்லதற்காகவும், கெட்டதற்காகவும் கழித்து, எத்தனையோ தர்மங்களையும் அதர்மங்களையும் செய்து,  வாழ்வில் கஷ்ட நஷ்டங்கள் இன்ப துன்பங்கள் அனைத்தையும் நுகர்ந்து வாழ்ந்த மனிதன் அடங்கிக் கிடக்கும் இடங்களைப் பார்க்கும் போதெல்லாம்,  இதுதான் நாளைக்கு நமது நிலையும். எதற்காக மனமே இப்படி அலைகிறாய்?

எப்படியிருந்தாலும் வாழ்ந்தா லும் தாழ்ந்தாலும் இதுவன்றோ முடிவு? எனக் கேட்டுக் கொள்ளவே சமாதிகள் பக்கம் போவேன்.

பிறரைச் சுடச் சுட பேசுகிற மனமே.. இதோ சுட்ட பின்பு இருக்கும் இடம் தெரியாமல் போகிற இந்த மனிதனும் இப்படித்தான் இருந்தான். எதையும் அவன் வாரிக்கொண்டு போகவில்லை.. இப்படி நீ இருக்கக் கூடாது.. எதிலும் யதார்த்தத்தை நினைத்து வாழ் என என் மனதிற்குச் சொல்வதற்காகவே அந்தப் பக்கம் போவேன்.

ஒரு விக்ஷயம் தெரியுமா உங்களுக்கு? நான் எந்தப் பக்கம் போனாலும் அந்தப் பக்கம் நம் ஆள் ஒருவன் இருக்கிறான்.. எங்கே சாமி இந்தப் பக்கம் எனக் கேட்கிறான்? எனக்கு முன்னால் அங்கு அதைத்தேடி வந்திருப்பான் என நினைத்துக்கொள்வேன்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...