Saturday, September 21, 2013

சாயி பிரேரணா – பாகம் 10


சாயி பிரேரணா – பாகம் 10
(Translated into Tamil by Santhipriya)
 
விளக்குகள் அனைத்தையும் நான் என் கைகளால் எற்றுவதாக நீ கருதினால் , அனைத்து விளக்கிலும் கடவுளைக் காணலாம்
மற்ற மதத்தினருடன் நீ ஒற்றுமையாக வாழ்ந்தால் , அனைவரையும் உன்னுடைய நெருக்கமானவர்களாக மாற்றுவேன்
சாயிராம் என்பதையே நினைத்திருந்தால், நீ செய்யும் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்
நீ எனக்காக அன்னதானம் செய்தால், நீ தந்த ஒவ்வொரு பருக்கைக்கும் உனக்கு நல்லதை தருவேன்
என்னுடைய சமாதியை உன் கரங்களினால் தொட்டு வணங்கினால், உனது விதி ரேகைகளை மாற்றி அமைப்பேன்
என் சமாதியில் சாயி ராம் சாயி ராம் என நீ குரல் எழுப்பினால், என்னுடைய ஆலயத்தின் அனைத்து சுவர்களிலும் சாயி ராம் என்ற உணர்வு ஒலிப்பதை நீ காணலாம்
என்னுடைய சமாதியில் நீ சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினால், நீ என்னால் முழுமையாக ஏற்கப்பட்டு விட்டதாகக் கருதுவேன்
என்னுடைய புனித இடங்களில் நீ தாராளமாகத் தானம் செய்தால், அதை மிகவும் நல்ல செயலாகவே கருதுவேன்
என்னுடைய ஆரத்தியின் பொழுது நீ கைகளை தட்டிக் கொண்டு இருந்தால் , அந்த கைகளின் உள்ளே தெய்வீகத்தை தருவேன்
எனக்கு முன்னால் நீ நடனமாடினால் ,  அந்த நடனத்தின் இசை கருவிகளின் கீதமாக நான் இருப்பேன்
என்னிடம் முழுமையாக சரண் அடைந்து விட்டால், உன்னுடைய இதயத்திற்கு வலிமை சேர்ப்பேன்
ராமநவமி பண்டிகையை நீ கொண்டாடினால் நீ கொண்டாடும் அனைத்து பண்டிகைகளிலும் நான் இருப்பேன்
என் ஆலயத்தை சுற்றி நீ நடந்து வந்து வணங்கினால், அது உன்னுடைய அனைத்து கடவுள்களையும் வணங்கியதற்கு சமமாகிவிடும் .
நன்றி:  http://forum.spiritualindia.org

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...