Tuesday, September 17, 2013

சாயி பிரேரணா – பாகம் 6



சாயி பிரேரணா – பாகம் 6
(Translated into Tamil by Santhipriya)
 
என்னுடைய பாதயாத்திரையின்போது என் பக்கத்திலேயே நீ நடந்து வந்தால், அனைத்து பாதயாத்திரையிலும் உன்னை நான் அழைத்துக் கொள்வேன்
என் பாதயாத்திரையில் கலந்து கொள்பவர்களுக்கு நீ சேவை செய்தால், உன்னுடைய அனைத்து சேவையிலும் நானும் பங்கேற்பேன்
சீரடிக்கு நடைப் பயணமாக நீ வந்தால்,  அனைத்து புண்ணிய இடங்களுக்கும் செல்ல உதவுவேன்
ஒருமுறை என் பாதயாத்திரையில் நீ கலந்து கொண்டால், உன்னுடன் எழுபத்தி ஓர் ஜென்மம் நான் பயணிப்பேன்
என் பாதயாத்திரையில் ஒன்பது நாள் பயணத்தில் நீ பங்கேற்றால்,  உன் உயிர் மூச்சாக நான் இருப்பேன்
என் சமாதியில் நீ துணியை போட்டு வணங்கினால்,வ்வொரு இழையின் அளவுக்கு நான் உனக்கு நன்மையை திருப்பித் தருவேன்
பாதயாத்திரையில் என் பல்லக்கை நீ சுமந்து கொண்டு சென்றால், அதன் சுமையை பூப்போல மாற்றுவேன் .
பாதயாத்திரையில் என் பாடத்தை மனதில் நினைத்திருந்தபடி ஸ்ரீ சாயி ஸ்ரீ சாயி என கூவிக்கொண்டே சென்றால், நடக்கும் வலியை உன் கால்கள் உணரவே உணராதது
எனக்காக நீ சுயநலம் இன்றி வேலை செய்தால், உன் கைகள் நல்லவற்றையே செய்யும்
என்னுடைய சமாதியில் மிகுந்த பணிவோடு முன் தலையால் தொட்டு வணங்கினால்,  அங்கு என்னையே நீ காணலாம்
என் சமாதிக்கு முன் வேண்டுவது கிடைக்கும்
என் சமாதி முன் உன் இரு கைகளையும் நீட்டியபடி வேண்டும் பொழுது, அந்த கைககள் நிறையும் அளவு அனைத்தும் நான் தருவேன்
என்னை உன்னால் பார்க்க முடியாத பொழுது அழுதால், அந்த கண்ணீரிலேயே இறைவனின் ஓளி கிடைக்கும்

 
நன்றி:  http://forum.spiritualindia.org

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...