Wednesday, September 18, 2013

சாயி பிரேரணா – பாகம் 7


சாயி பிரேரணா – பாகம் 7
(Translated into Tamil by Santhipriya)
 
ஷீரடிக்கு வந்து என்னுடைய ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் நீ என்னுடைய பிரசாதத்தை உண்டால், உனக்கு வரும் அனைத்து தொல்லைகளும் விலகி தீமை ஒழியும்
காகாட் ஆரத்தியில் நீ கலந்து கொண்டால், அங்கு உனக்கு என் தரிசனத்தைத் தருவேன்
நீ அங்கு வந்து எனக்கு தேங்காயைத் தந்தால், உன்னை ஒரு யோகி போல மாற்றுவேன்
என்னுடைய ஆரத்தியில் கலந்துகொள்ள உன் நேரத்தை ஒதுக்கினால், உனக்கு வரும் அனைத்து தடைகளையும் விலக்குவேன்
என் ஆலயத்தில் உள்ள கொடியை நீ பக்திபூர்வமாகப் பார்த்தால், என்னுடைய சச்சிதானந்த ஸ்வரூபத்தைக் அதில் காண முடியும்
சீரடி மண்ணின் தூசியை உன் நெற்றியில் இட்டுக் கொண்டால், உன் அனைத்து வேலைகளிலும் நான் உதவுவேன்
நீ ஆரத்தியில் ஏழும் மணி ஓசையைக் கேட்கும்போது, அந்த ஓளி உன் காதில் சாயி , சாயி என ஒலிப்பதைக் காணமுடியும்
என்னை நீ ஒரு வெள்ளி இருக்கை மீது அமர வைத்திருந்தால் , உனக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்
இந்த பிரேரணாவை ( மன நிலையை ) என் ஆலயத்தில் வைக்கும் பொழுது, உன்னை நான் என்றும் பாதுகாத்து நிற்பேன்
இந்த பிரேரணாவை நீ தினமும் காலையிலும் மாலையிலும் படிக்கும்போது, என்னை பற்றி எழுதும் எழுத்தாளனாக உன்னை மாற்றுவேன்
இந்த பிரேரணாவில் நீ என்னுடைய உணர்வுகளை உணர முடிந்தால்,  உன்னை நான் ஆத்ம உணர்வு கொண்ட மனிதனக்குவேன் .
இந்த பிரேரணாவின் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்டால்,  உன்னை தினமும் என்னை வணங்க வழி செய்வேன்
என்னுடைய இந்த புனித இடத்தில்,  தூய்மையுடன் நீ இருந்தால் உன்னையும் கங்கையைப் போல தூய்மையானவனாக ஆக்குவேன் .



No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...