Monday, September 2, 2013

கூடுதல் ஞானம்!


கூடுதல் ஞானம் பெறுவது எப்படி?
                                ( ஆர். கே. பரஞ்சோதி, கோவை)
ஒவ்வொரு சூழலுக்கும் கடவுள் எதைக் கற்றுத் தருகிறான் என்பதை கண்டுகொள்ள கவனத்தை அதன் பால் முழுவதுமாக செலுத்தி வேண்டும்.
உதாரணமாக, பால்காரன் பால் கறக்கும் முன்பு கன்றை தாயின் மடியில் முட்டவிடுகிறான். பால் சுரக்க ஆரம்பித்த பிறகு, கன்றை இழுத்துக் கட்டி விட்டு, பால் கறக்கிறான். கன்றை இழுத்துக் கட்டி விட்டானே என பால் சுரப்பதை பசு அடக்காது.
இதைப் பார்த்து, நமக்கு செல்வம் சேர்வது நம் பிள்ளைகளுக்காக அல்ல, பிறருக்கு தருவதற்காக என உணரவேண்டும். பிறருக்காக நாம் சாப்பிட்டு சேர்க்க வேண்டும் என்பதை உணர வேண்டும்.
எப்போதாவது தன்னைப் பெரிய ஆள் என நினைத்துக் கொள்ளும்போது, நிறைய ஆட்கள் நடமாட்டமுள்ள இடத்தில் ஓரமாக நின்று நமது முக்கியத்துவத்தைப் பரிசோதிக்க வேண்டும்.
அங்கே வந்து செல்லும் ஆயிரமாயிரம் மக்களில் நான் ஒரு துளி. என்னை கண்டு கொள்வார்.  யாருமில்லை. நான் எளியவனா?  ஏழையா? செல்வந்தனா?  உயர்ந்தவனா?  தாழ்ந்தவனா?  என யாருக்கும் எண்ணிப்பார்க்க நேரமில்லை. அப்படியிருந்தாலும் என் மீது இறைவன் தனிக்கவனம் செலுத்துகிறானே.. அது அவனது தனிப்பெரும் கருணை.

இதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்க வேண்டும். இப்படி தன்னைத்தான் ஒவ்வொன்றிலும் பொருத்தி உணரும்போது, அது ஞானமாகப் பேசப்படும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...