Friday, September 20, 2013

சாயி பிரேரணா – பாகம் 9


சாயி பிரேரணா – பாகம் 9
(Translated into Tamil by Santhipriya)

என்னுடைய பாதங்களை நீ வணங்கினால், அதில் திருவேணி எனப்படும் பிரயாக் நதியைக் காட்டுவேன்
என்னுடைய சிலை உனக்கு ஆறுதலைத் தருவதுபோல நீ உணர்ந்தால், உனக்கு முடிவில்லா ஆனந்தத்தையும் அமைதியையும் நான் தருவேன்
என்னை நீ தொடர்ந்து வணங்கி வந்தால், ஒழுக்கமான முறையில் வணங்குவதை உனக்கு நான் கற்றுத் தருவேன்
உன்னைக் காப்பவனாக என்னை நினைத்து, நீ அபிஷேகம் செய்தால், ஒவ்வொரு அபிஷேகத்தின் பொழுதும் உன்னுடைய பாதுகாவலனாக நான் மாறுவேன்
என்னையே நீ அனைத்து கடவுளாக எண்ணிப் பார்த்தால், நான் உனக்கு அனைத்துக் கடவுளுமான ஒரே கடவுளாக நான் மாறுவேன்
சாயி மந்திரத்தை சிரத்தையாக செய்தால், மந்திரத்தின் பொருளை உனக்கு உணர்த்துவேன்
நீ என்னை பற்றிய அனைத்து விஷயங்களையும் படித்து தெரிந்து கொண்டால், உன்னை ஞானம் உள்ளவனாக்குவேன்
நீ என்னிடம் அன்பு செலுத்தினால், உன்னை என் நிழலில் வைத்திருந்து பாதுகாப்பேன்
என்னை உன் குருவாகக் கருதினால், உனக்கு குரு மந்திரத்தை உபதேசிப்பேன்
என்னை ஒரு யோகியாகப் பார்த்தால், உன்னால் இந்த அழிவற்ற உலகின் தெய்வீகத்தை பார்க்க முடியும்
தி எனும் விபூதியை நீ மருந்தாகப் பார்த்தால் , உன்னுடைய அனைத்து நோய்களையும் விலக்குவேன்
என்னை ஜோதியாகப் பார்த்தால் , எந்த ஒரு எரியும் விளக்கின் ஒளியிலும் என்னைப் பார்க்க முடியும் .
நன்றி:  http://forum.spiritualindia.org

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...