Friday, September 13, 2013

சாயி பிரேரணா – பாகம் 2



சாயி பிரேரணா – பாகம் 2
(Translated into Tamil by Santhipriya)



ஒரு கோவிலிற்க்கோ , குருத்வாராவிற்க்கோ அல்லது 


சூதிக்கோ செல்லும்போது அங்கெல்லாம் என்னையே நீ 

நினைத்து கொண்டு இருந்தால்,  உனக்கு அனைத்து இடத்திலும் 

தரிசனம் தருவேன்

ஒவ்வொரு கணமும் நீ என்னையே நினைத்துக் கொண்டு 

இருந்தால், அந்த ஒவ்வொரு கணமும் நான் உன்னை 

காப்பாற்றுவேன்

எனக்காக சிறிது கஷ்டத்தை நீ ஏற்றுக் கொண்டால், உனக்கு 

வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து கஷ்டத்தையும் விலக்குவேன் 
.
என்னுடைய புனிதத்தலத்திற்கு (ஷீரடி ) வந்து நீ நடந்தால், நீ 

செய்த அனைத்து பாபங்களையும் ஒழிப்பேன்

உன் கையால் நீ எனக்கு பிரசாதம் படைத்தால்,  உன் வீட்டிலே

 உணவுப் பொருட்கள் நிறைந்தே இருக்கும்

என்னுடைய புனிதப் புத்தகத்தை படித்தால்,  நீ வாழ்வில் பெரும் 

வெற்றி அடைவாய்

என்னுடைய பக்தர்களைக் காணும்பொழுது அவர்களில் நீ 

என்னையே பார்த்தால்,  உன்னை ஜொலிக்க வைப்பேன்

என் நாமத்தை ஒரு மணி மாலை அளவில் உருட்டி ஜபித்தால்,

 உன்னை சாதுக்களைப் போன்ற ஞானம் உள்ளவனாக்குவேன் .

இதயப் பூர்வமாக ஓம் சாயிராம் என ஜபித்தால், உன்னுடைய 


அனைத்து வேண்டுகோளையும் நான் கேட்பேன்

என் மீதே தியானம் வைத்திருந்தால்,  நீ கவர்ச்சி உள்ளவனாக 

மாறிவிடுவாய்

எனக்காக நீ மௌனம் காத்தால்,  உனக்கு அமைதி கிடைக்கும்

நீ என் எதிரிலேயே அமர்ந்து இருந்தால்,  நான் எப்போதும் 

உன்னுடனேயே இருப்பேன்

சாந்திலால்,  நீ என்னுடைய துதியை தூய மனதுடன் 

செய்ததினால் , உன்னுடைய வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக 

மாற்றுவேன்           

                  
நன்றி:  http://forum.spiritualindia.org

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...