Monday, September 16, 2013

சாயி பிரேரணா – பாகம் 5


சாயி பிரேரணா – பாகம் 5
(Translated into Tamil by Santhipriya)



பாகம் - 5 
உன்னுடைய வாழ்க்கை எனும் ஓடத்தை என்னிடம் தந்துவிட்டால்,  இந்த வாழ்வெனும் கடலைக் கடக்க நான் உதவி செய்வேன்
நீ துனியில் இருந்து வரும் புகையை சுவாசித்தால், உன் உடலில் உள்ள அனைத்து நோயும் நீங்கிவிடும்
துவாகாமாயி மற்றும் என் சமாதியின் பெருமையும் நீ உணர்ந்து கொண்டால், என்னை நீ பார்க்க முடியும்
உன்னுடைய வாழ்க்கையையே என்னிடம் தந்து விட்டால்,  உன்னுடைய வாழ்வின் ஒரு அங்கமாக நான் இருப்பேன்
என் மீது நம்பிக்கை வைத்து என்மீது உன் மனதை செலுத்தி வந்தால், அனைவரும் உன் மீது நம்பிக்கை வைப்பார்கள்
வியாழன் அன்று தரப்படும் என்னுடைய பிரசாதத்தை நீ பணிவுடன் ஏற்றுக்கொண்டால், அன்றைய தினத்தின் அனைத்து நன்மைகளும் உனக்கு கிடைக்கும்
என்னையே நீ நினைத்துக் கொண்டு இருந்தால், அனைவரும் உன்னையே நினைத்துக் கொள்வார்கள்
என்னையே நீ வேண்டிக்கொண்டால், உன்னுடைய அனைத்து வேண்டுகோளின் போதும், நான் வந்து உனக்கு வழி காட்டுவேன்
என்னை தூய கண்களுடன் நீ தரிசித்தால், அனைத்து மதத்தினரையும் அன்புடன் பார்க்க வைப்பேன்
என்னை ஊதுபத்தி புகையில் இருந்து வெளிவருவதாக கருதிப் பார்த்தாயானால்,  எந்த இடத்தில் இருந்து வரும் புகையிலும் என்னை நினைக்க வைப்பேன்
சாயி ஆலயத்தில் ஏதாவது வேலையில் நான் உதவிக்கொண்டு இருப்பவனைப் போல இருப்பதாக நீ உணர்ந்தால்,  உன்னுடைய அனைத்து காரியத்திலும் நான் உதவுவேன்
என்முன் நீ கைகூப்பி நின்றால், உன் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தடங்கல்களையும் தடுத்து நிறுத்துவேன்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...