Thursday, September 26, 2013

சாயி பிரேரணா முழுதும்



சாயி பிரேரணா 
(Translated into Tamil by Santhipriya)

பாகம் - 1 
என் வழியில் நீ வந்தால், உனக்கு எல்லா வழியையும் திறந்து விடுவேன்
எனக்காக நீ சிறிது நேரத்தை ஒதுக்கினால்,  உனக்கு குபேரனுடைய பொக்கிஷத்தைப் போன்றதை தருவேன் 
என்னால் நீ பழிச்சொல்லை ஏற்றால்,  உனக்கு பூரண அருள் கிடைக்கும்
நீ என்னிடம் வந்தால், உன்னை நான் பாதுகாப்பேன்
என்னைப் பற்றி நீ மற்றவர்களிடம் கூறிக்கொண்டே இருந்தால், உன்னை விலை மதிப்பற்றவனாக்கி விடுவேன்
நீ என்னைப் பற்றி நினைத்துக் கொண்டு இருந்தால், உன்னை ரத்னம் போன்று ஜொலிக்கும் ஆன்மீக ஞானம் உள்ளவனாக மாற்றுவேன்
என் உதவியை நாடி வந்து என்னையே ஏற்றால், உன்னை அடிமைத்தனத்தில் இருந்து மீட்பேன்
எனக்காக உன்னை எந்த விதத்திலாவது நீ தந்துவிட்டால், உன்னை விலை மதிப்பற்றவனாக்கி விடுவேன்
என் வழியில் நீ நடந்தால்,  நீ பெரும் புகழ் பெறுவாய் .
என்னைப்பற்றி பாடிக்கொண்டே இருந்தால்,  ந்த உலகையே நீ மறந்துவிடுவாய் .
நீ என்னுடையவன் என ஆகிவிட்டால், அனைவரும் உன்னுடயவர்களாகி விடுவார்கள்


பாகம் - 2

ஒரு கோவிலிற்க்கோ , குருத்வாராவிற்க்கோ அல்லது மசூதிக்கோ செல்லும்போது அங்கெல்லாம் என்னையே நீ நினைத்து கொண்டு இருந்தால்,  உனக்கு அனைத்து இடத்திலும் தரிசனம் தருவேன்
ஒவ்வொரு கணமும் நீ என்னையே நினைத்துக் கொண்டு இருந்தால், அந்த ஒவ்வொரு கணமும் நான் உன்னை காப்பாற்றுவேன்
எனக்காக சிறிது கஷ்டத்தை நீ ஏற்றுக் கொண்டால், உனக்கு வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து கஷ்டத்தையும் விலக்குவேன் .
என்னுடைய புனிதத்தலத்திற்கு (ஷீரடி ) வந்து நீ நடந்தால், நீ செய்த அனைத்து பாபங்களையும் ஒழிப்பேன்
உன் கையால் நீ எனக்கு பிரசாதம் படைத்தால்,  உன் வீட்டிலே உணவுப் பொருட்கள் நிறைந்தே இருக்கும்
என்னுடைய புனிதப் புத்தகத்தை படித்தால்,  நீ வாழ்வில் பெரும் வெற்றி அடைவாய்
என்னுடைய பக்தர்களைக் காணும்பொழுது அவர்களில் நீ என்னையே பார்த்தால்,  உன்னை ஜொலிக்க வைப்பேன்
என் நாமத்தை ஒரு மணி மாலை அளவில் உருட்டி ஜபித்தால்,  உன்னை சாதுக்களைப் போன்ற ஞானம் உள்ளவனாக்குவேன் .
இதயப் பூர்வமாக ஓம் சாயிராம் என ஜபித்தால், உன்னுடைய அனைத்து வேண்டுகோளையும் நான் கேட்பேன்
என் மீதே தியானம் வைத்திருந்தால்,  நீ கவர்ச்சி உள்ளவனாக மாறிவிடுவாய்
எனக்காக நீ மௌனம் காத்தால்,  உனக்கு அமைதி கிடைக்கும்
நீ என் எதிரிலேயே அமர்ந்து இருந்தால்,  நான் எப்போதும் உன்னுடனேயே இருப்பேன்
சாந்திலால்,  நீ என்னுடைய துதியை தூய மனதுடன் செய்ததினால் , உன்னுடைய வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக மாற்றுவேன்           
  பாகம் - 3 

நீ என்னிடம் வந்தால் உன் துயர் நீக்குவேன் , துன்பத்தைக் களைவேன்
நீ என்னுடைய புனித பூமியான ஷீரடியில் வாழ்ந்தால் , உன் வீட்டையும் புனித இடமாக்குவேன்
என் பிரசாதங்களை நீ பக்தியுடன் ஏற்றால்,  உன் நினைவுகளைத் தூய்மை ஆக்குவேன்
நீ என்னை பக்திபூர்வமாக வணங்கிவந்தால்,  உன்னை கர்மயோகியாக மாற்றுவேன்
எனக்கு நடக்கும் ஆரத்தியில் நீ சேர்ந்து பாடினால்,  உன் நாவில் சரஸ்வதியை வாசம் செய்ய வைப்பேன் .
என் வழியில் நீ நடந்தால் உனக்கு முன் நடந்து வழி காட்டுவேன்
எனக்காக நீ துன்பமுற்றோர்க்கு உதவினால்,  உன் இதயத்தில் ஆனந்தத்தையும்,  அமைதியையும் தருவேன்
என்னை உன் வீட்டில் நீ வைத்திருந்தால்,  உன் வீடு சொர்க்கம் போல ஆகும்
என்னுடைய உதி எனும் விபூதியை நீ நெற்றியில் தடவிக்கொண்டால்,  உன் முகமே தெய்வீகக் களை பெறும்
என்மீது நீ பூக்கள் பொழிந்தால்,  உன்னுள் நல்ல நினைவுகள் தோன்ற அருள் புரிவேன்
என் பாதங்களைத் தொட்டு வணங்கினால், உன்னை அனைவரும் விரும்புவனாக ஆக்குவேன்
என் பாதங்களைத் தொட்டு வணங்கினால், நான் உன்னுள் முழுமையாக வியாபித்து இருப்பேன்
சந்தனத்தை என் நெற்றியில் பொட்டாக வைத்தால், உன்னை அதிர்ஷ்டசாலியாக்குவேன்
பாகம் - 4 
நீ என்னுடைய கல்போன்ற கிரீடத்தின் முன் தலை குனிந்து நின்றால், உன்னுடைய பல்லாயிரக்கணக்கான பாபங்களை விலக்குவேன்
நீ சாயி பக்தன் ஆனால்,  பக்தி மார்கத்தின் பல வெள்ளங்களில் உன்னை மூழ்கடிப்பேன்
நீ என்னுடைய படத்தை உன் உடலில் அணிந்து இருந்தால் உன் உடல் முழுவதும் நான் வியாபித்து இருப்பேன்
நீ என்னைப்பற்றி புத்தகம் எழுதினால் அதை பிரபலமானதாக ஆக்குவேன்
சீரடியில் வந்து நின்று என் புகழ் பாடினால் உனக்கு அனைத்து நற்குணங்களும் நிறையும்
நீ பலமணி நேரம் நின்றுகொண்டு இருந்தபடி என்னை தரிசித்தால் , உன்னை அனைத்து புண்ணிய தீர்த்தங்களுக்கும் செல்ல வழி வகுப்பேன் அல்லது அனைத்து புண்ணிய தீர்த்த மகிமைகளை உனக்கு நான் அளிப்பேன்
நீ என் பாதுகைகளை வணங்கினால், உன்னை என்னுடைய முழு பக்தனாக ஏற்றுக்கொள்வேன்
நீ எனக்கு முன்னால் விளக்கு ஏற்றினால்,  உன் வாழ்வும் ஓளி மிக்கதாக ஆகும்
நீ என்னுடைய வழிபாட்டு தலத்திற்கு வந்து என்னை வணங்கினால், பல பக்தர்கள் அங்கு வந்து வணங்கியதற்கு சமம் ஆக்குவேன்
என்னை உன் வீட்டில் வைத்து வழிபட்டால் , உன்னுடைய அனைத்து வழிபாட்டிலும் என்னை நீ காணலாம் .
உனக்கு சீரடிக்கு வர மனது இருந்தால், மீண்டும் மீண்டும் ஷீரடிக்கு வர வழிப்பேன்
நீ என்மீது தூய பக்தி கொண்டு அன்பு செலுத்தினால், என்னுடைய முழு அன்பும் உனக்கு கிடைக்கும்
நீ என்னை உன்னுடையவனாக நினைத்தால் , என்னை உன்னுள் நீயே காண முடியும்
பாகம் - 5 
உன்னுடைய வாழ்க்கை எனும் ஓடத்தை என்னிடம் தந்துவிட்டால்,  இந்த வாழ்வெனும் கடலைக் கடக்க நான் உதவி செய்வேன்
நீ துனியில் இருந்து வரும் புகையை சுவாசித்தால், உன் உடலில் உள்ள அனைத்து நோயும் நீங்கிவிடும்
துவாகாமாயி மற்றும் என் சமாதியின் பெருமையும் நீ உணர்ந்து கொண்டால், என்னை நீ பார்க்க முடியும்
உன்னுடைய வாழ்க்கையையே என்னிடம் தந்து விட்டால்,  உன்னுடைய வாழ்வின் ஒரு அங்கமாக நான் இருப்பேன்
என் மீது நம்பிக்கை வைத்து என்மீது உன் மனதை செலுத்தி வந்தால், அனைவரும் உன் மீது நம்பிக்கை வைப்பார்கள்
வியாழன் அன்று தரப்படும் என்னுடைய பிரசாதத்தை நீ பணிவுடன் ஏற்றுக்கொண்டால், அன்றைய தினத்தின் அனைத்து நன்மைகளும் உனக்கு கிடைக்கும்
என்னையே நீ நினைத்துக் கொண்டு இருந்தால், அனைவரும் உன்னையே நினைத்துக் கொள்வார்கள்
என்னையே நீ வேண்டிக்கொண்டால், உன்னுடைய அனைத்து வேண்டுகோளின் போதும், நான் வந்து உனக்கு வழி காட்டுவேன்
என்னை தூய கண்களுடன் நீ தரிசித்தால், அனைத்து மதத்தினரையும் அன்புடன் பார்க்க வைப்பேன்
என்னை ஊதுபத்தி புகையில் இருந்து வெளிவருவதாக கருதிப் பார்த்தாயானால்,  எந்த இடத்தில் இருந்து வரும் புகையிலும் என்னை நினைக்க வைப்பேன்
சாயி ஆலயத்தில் ஏதாவது வேலையில் நான் உதவிக்கொண்டு இருப்பவனைப் போல இருப்பதாக நீ உணர்ந்தால்,  உன்னுடைய அனைத்து காரியத்திலும் நான் உதவுவேன்
என்முன் நீ கைகூப்பி நின்றால், உன் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தடங்கல்களையும் தடுத்து நிறுத்துவேன்
பாகம் - 6 
என்னுடைய பாதயாத்திரையின்போது என் பக்கத்திலேயே நீ நடந்து வந்தால், அனைத்து பாதயாத்திரையிலும் உன்னை நான் அழைத்துக் கொள்வேன்
என் பாதயாத்திரையில் கலந்து கொள்பவர்களுக்கு நீ சேவை செய்தால், உன்னுடைய அனைத்து சேவையிலும் நானும் பங்கேற்பேன்
சீரடிக்கு நடைப் பயணமாக நீ வந்தால்,  அனைத்து புண்ணிய இடங்களுக்கும் செல்ல உதவுவேன்
ஒருமுறை என் பாதயாத்திரையில் நீ கலந்து கொண்டால், உன்னுடன் எழுபத்தி ஓர் ஜென்மம் நான் பயணிப்பேன்
என் பாதயாத்திரையில் ஒன்பது நாள் பயணத்தில் நீ பங்கேற்றால்,  உன் உயிர் மூச்சாக நான் இருப்பேன்
என் சமாதியில் நீ துணியை போட்டு வணங்கினால்,வ்வொரு இழையின் அளவுக்கு நான் உனக்கு நன்மையை திருப்பித் தருவேன்
பாதயாத்திரையில் என் பல்லக்கை நீ சுமந்து கொண்டு சென்றால், அதன் சுமையை பூப்போல மாற்றுவேன் .
பாதயாத்திரையில் என் பாடத்தை மனதில் நினைத்திருந்தபடி ஸ்ரீ சாயி ஸ்ரீ சாயி என கூவிக்கொண்டே சென்றால், நடக்கும் வலியை உன் கால்கள் உணரவே உணராதது
எனக்காக நீ சுயநலம் இன்றி வேலை செய்தால், உன் கைகள் நல்லவற்றையே செய்யும்
என்னுடைய சமாதியில் மிகுந்த பணிவோடு முன் தலையால் தொட்டு வணங்கினால்,  அங்கு என்னையே நீ காணலாம்
என் சமாதிக்கு முன் வேண்டுவது கிடைக்கும்
என் சமாதி முன் உன் இரு கைகளையும் நீட்டியபடி வேண்டும் பொழுது, அந்த கைககள் நிறையும் அளவு அனைத்தும் நான் தருவேன்
என்னை உன்னால் பார்க்க முடியாத பொழுது அழுதால், அந்த கண்ணீரிலேயே இறைவனின் ஓளி கிடைக்கும்
பாகம் - 7 
ஷீரடிக்கு வந்து என்னுடைய ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் நீ என்னுடைய பிரசாதத்தை உண்டால், உனக்கு வரும் அனைத்து தொல்லைகளும் விலகி தீமை ஒழியும்
காகாட் ஆரத்தியில் நீ கலந்து கொண்டால், அங்கு உனக்கு என் தரிசனத்தைத் தருவேன்
நீ அங்கு வந்து எனக்கு தேங்காயைத் தந்தால், உன்னை ஒரு யோகி போல மாற்றுவேன்
என்னுடைய ஆரத்தியில் கலந்துகொள்ள உன் நேரத்தை ஒதுக்கினால், உனக்கு வரும் அனைத்து தடைகளையும் விலக்குவேன்
என் ஆலயத்தில் உள்ள கொடியை நீ பக்திபூர்வமாகப் பார்த்தால், என்னுடைய சச்சிதானந்த ஸ்வரூபத்தைக் அதில் காண முடியும்
சீரடி மண்ணின் தூசியை உன் நெற்றியில் இட்டுக் கொண்டால், உன் அனைத்து வேலைகளிலும் நான் உதவுவேன்
நீ ஆரத்தியில் ஏழும் மணி ஓசையைக் கேட்கும்போது, அந்த ஓளி உன் காதில் சாயி , சாயி என ஒலிப்பதைக் காணமுடியும்
என்னை நீ ஒரு வெள்ளி இருக்கை மீது அமர வைத்திருந்தால் , உனக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்
இந்த பிரேரணாவை ( மன நிலையை ) என் ஆலயத்தில் வைக்கும் பொழுது, உன்னை நான் என்றும் பாதுகாத்து நிற்பேன்
இந்த பிரேரணாவை நீ தினமும் காலையிலும் மாலையிலும் படிக்கும்போது, என்னை பற்றி எழுதும் எழுத்தாளனாக உன்னை மாற்றுவேன்
இந்த பிரேரணாவில் நீ என்னுடைய உணர்வுகளை உணர முடிந்தால்,  உன்னை நான் ஆத்ம உணர்வு கொண்ட மனிதனக்குவேன் .
இந்த பிரேரணாவின் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்டால்,  உன்னை தினமும் என்னை வணங்க வழி செய்வேன்
என்னுடைய இந்த புனித இடத்தில்,  தூய்மையுடன் நீ இருந்தால் உன்னையும் கங்கையைப் போல தூய்மையானவனாக ஆக்குவேன் .
பாகம் -8 
 •
என்னைப்பற்றிய அனைத்தையும் நீ எடுத்துக் கூறி வந்தால், உன்னுடைய பேச்சுக்களில் நல்லவை , தீயவை பற்றி எடுத்துக் கூறும் திறமை வரும்
நீ என் வேலைகளை செய்து வந்தால்,  நான் உன் வேலைகளை செய்வேன்
நீ என்னை பகவான் ராமராகப் பார்த்தால்,  உன்னால் மாயையை வெல்ல முடியும்
நீ எனக்கு அணிகலன்களை அணிவித்தால், உன்னை மிக அழகுள்ளவனாக மாற்றுவேன்
என்னையே நீ உன்னுடைய பாதுகாவலனாக நினைத்தால் , உன்னை நான் நிச்சயமாகப் பாதுகாப்பேன்
என் முன் அமர்ந்துகொண்டு ராம நாமம் ஜெபித்தாயானால் , தர்மம் என்பது என்ன என்பதை புரிந்து கொள்ள வழி செய்வேன்
என்னை நீ ராமனாகவும் , ரஹீமாகவும் பார்த்தால், உனக்கு தர்மம் என்ன என்பதை புரிய வைப்பேன்
என்னை இந்த உலகைக் காப்பவனாகவும் , அனைத்தையும் கொடுப்பவனாகவும் எண்ணிப் பார்த்தால், உனக்கும் அனைத்தையும் தந்து உன்னை காப்பேன்
என்னை சீரடியின் மகானாகப் பார்த்தால், என்னிடம் நீ அடைக்கலம் ஆகிவிட்டவனாகக் கருதுவேன்
என்னிடம் எப்போதும் பக்திபூர்வமாக இருந்தால், உனக்கு பிறப்பில் இருந்தும் மரணத்தில் இருந்தும் விடுதலைத் தருவேன்
ஷீரடியை நீ புனிதத் தலமாகக் கருதினால், நீயே என்னுடைய பக்தனாவாய்






பாகம் -9
என்னுடைய பாதங்களை நீ வணங்கினால், அதில் திருவேணி எனப்படும் பிரயாக் நதியைக் காட்டுவேன்
என்னுடைய சிலை உனக்கு ஆறுதலைத் தருவதுபோல நீ உணர்ந்தால், உனக்கு முடிவில்லா ஆனந்தத்தையும் அமைதியையும் நான் தருவேன்
என்னை நீ தொடர்ந்து வணங்கி வந்தால், ஒழுக்கமான முறையில் வணங்குவதை உனக்கு நான் கற்றுத் தருவேன்
உன்னைக் காப்பவனாக என்னை நினைத்து, நீ அபிஷேகம் செய்தால், ஒவ்வொரு அபிஷேகத்தின் பொழுதும் உன்னுடைய பாதுகாவலனாக நான் மாறுவேன்
என்னையே நீ அனைத்து கடவுளாக எண்ணிப் பார்த்தால், நான் உனக்கு அனைத்துக் கடவுளுமான ஒரே கடவுளாக நான் மாறுவேன்
சாயி மந்திரத்தை சிரத்தையாக செய்தால், மந்திரத்தின் பொருளை உனக்கு உணர்த்துவேன்
நீ என்னை பற்றிய அனைத்து விஷயங்களையும் படித்து தெரிந்து கொண்டால், உன்னை ஞானம் உள்ளவனாக்குவேன்
நீ என்னிடம் அன்பு செலுத்தினால், உன்னை என் நிழலில் வைத்திருந்து பாதுகாப்பேன்
என்னை உன் குருவாகக் கருதினால், உனக்கு குரு மந்திரத்தை உபதேசிப்பேன்
என்னை ஒரு யோகியாகப் பார்த்தால், உன்னால் இந்த அழிவற்ற உலகின் தெய்வீகத்தை பார்க்க முடியும்
தி எனும் விபூதியை நீ மருந்தாகப் பார்த்தால் , உன்னுடைய அனைத்து நோய்களையும் விலக்குவேன்
என்னை ஜோதியாகப் பார்த்தால் , எந்த ஒரு எரியும் விளக்கின் ஒளியிலும் என்னைப் பார்க்க முடியும் .

பாகம் -10 
விளக்குகள் அனைத்தையும் நான் என் கைகளால் எற்றுவதாக நீ கருதினால் , அனைத்து விளக்கிலும் கடவுளைக் காணலாம்
மற்ற மதத்தினருடன் நீ ஒற்றுமையாக வாழ்ந்தால் , அனைவரையும் உன்னுடைய நெருக்கமானவர்களாக மாற்றுவேன்
சாயிராம் என்பதையே நினைத்திருந்தால், நீ செய்யும் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்
நீ எனக்காக அன்னதானம் செய்தால், நீ தந்த ஒவ்வொரு பருக்கைக்கும் உனக்கு நல்லதை தருவேன்
என்னுடைய சமாதியை உன் கரங்களினால் தொட்டு வணங்கினால், உனது விதி ரேகைகளை மாற்றி அமைப்பேன்
என் சமாதியில் சாயி ராம் சாயி ராம் என நீ குரல் எழுப்பினால், என்னுடைய ஆலயத்தின் அனைத்து சுவர்களிலும் சாயி ராம் என்ற உணர்வு ஒலிப்பதை நீ காணலாம்
என்னுடைய சமாதியில் நீ சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினால், நீ என்னால் முழுமையாக ஏற்கப்பட்டு விட்டதாகக் கருதுவேன்
என்னுடைய புனித இடங்களில் நீ தாராளமாகத் தானம் செய்தால், அதை மிகவும் நல்ல செயலாகவே கருதுவேன்
என்னுடைய ஆரத்தியின் பொழுது நீ கைகளை தட்டிக் கொண்டு இருந்தால் , அந்த கைகளின் உள்ளே தெய்வீகத்தை தருவேன்
எனக்கு முன்னால் நீ நடனமாடினால் ,  அந்த நடனத்தின் இசை கருவிகளின் கீதமாக நான் இருப்பேன்
என்னிடம் முழுமையாக சரண் அடைந்து விட்டால், உன்னுடைய இதயத்திற்கு வலிமை சேர்ப்பேன்
ராமநவமி பண்டிகையை நீ கொண்டாடினால் நீ கொண்டாடும் அனைத்து பண்டிகைகளிலும் நான் இருப்பேன்
என் ஆலயத்தை சுற்றி நீ நடந்து வந்து வணங்கினால், அது உன்னுடைய அனைத்து கடவுள்களையும் வணங்கியதற்கு சமமாகிவிடும் .
 
பாகம் -11 
நான் பேசிய ஒவ்வொரு சொல்லையும், உலகத்துக்கு எடுத்துரைத்தால் என்னுடைய வார்த்தைகள் உனக்கு மன அமைதி தரும்
நீ மனதார , இதயபூர்வமான சிரத்தையுடன் என்னை வணங்கி வந்தால், உனக்கு ஆன்மீக சந்தானத்தை தருவேன்
கங்கை நதிபோன்ற என்னைப் பற்றிய நினைவில் மூழ்கினால், இந்த உலகின் சம்சாரக் கடலில் இருந்து உன்னை கரை ஏற்றுவேன்
குரு மந்திரத்தை என்னுடைய புனித இடத்தில் ஓதி வந்தால், ஒவ்வொரு மந்திரத்திலும் குருவைக் காண முடியும்
நீ கண் உறங்காமல் சீரடியில் என்னை இரவு முழுவதும் பூஜித்தால், அதன் பயனை உனக்கு நான் உணர்த்துவேன்
என் முன் அமர்ந்துகொண்டு உன் துயரத்தைக் கூறினால், உன்னுடைய அனைத்து துயரத்தையும் ஆனந்தமயம் ஆனதாக மாற்றுவேன்
எனக்கு ஒரு மாலை ரோஜாவை அணிவித்தால், உன் வாழ்க்கையை மணமுள்ளதாக மாற்றுவேன்
என்னுடைய புனித இடத்தில் வந்து தீபம் ஏற்றினால், உன் வாழ்விலும் ஒளியை ஏற்றுவேன்
என்னுடைய அனைத்து பக்தர்களுக்கும் நீ பிரசாதம் தந்தால், உன்னை நல்லொழுக்கம் உள்ளவனாக்குவேன்
என்னுடைய புனிதக் கட்டைவிரலை நீ துதித்தால், குருபூர்ணிமா என்ற புனித பண்டிகையின் பலனைத் தருவேன்
என் முன் நின்று ஓம் என்ற மந்திரத்தைக் கூறினால், இந்த உலகின் அனைத்து ஆனந்தத்தையும் உனக்கு நான் தருவேன்




No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...