Thursday, September 5, 2013

ஆண்டுக்கணக்கான பிரச்சனைகளுக்கு அடுத்தடுத்து தீர்வு!


கடந்த ஓராண்டாக மாதந்தோறும் சாயி வரதராஜனுடன் சீரடிக்குச் செல்லும்போதெல்லாம் இது தொடர்பாக பிரார்த்தனை வைத்துவிட்டு வருவேன். இதன் பலனாக கோவிந்தராஜ், பாண்டியன் ஆகிய ஆசிரியர்கள் மூலம் பிள்ளையார் சுழி போடப்பட்டு, எனது தம்பி டாக்டர் முனுசாமி மூலமும் விதை விதைக்கப்பட்டது.
நான் பிறந்த மண் மாத்தூர் என்ற கிராமம். கள்ளக் குறிச்சிக்கு அருகில் சுமார் பதினைந்து கி.மீ. தொலைவில் உள்ளது. நான் படித்த பள்ளி எட்டாம் வகுப்பு வரை இருந்தது. ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெற்றும் உயர் நிலைப் பள்ளியாக ஏன் மாறவில்லை என்ற என்னுடைய ஏக்கம் பல ஆண்டுகளாக நிறைவேறாமல் இருந்தது. அது இப்போது நிறைவேறியுள்ளது.
பலவித தாமதம், தடங்களுக்குப் பிறகு பாபா அதை அனுமதியாக்கி பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக்கினார்.
ஆனால் அடுத்த கட்டமாக இடம் தேர்வு செய்யப்படவேண்டும். வந்துள்ள தலைமை ஆசிரியர் மிகவும் துடிப்புள்ள இளைஞ்ர், ஆர்வமுள்ளவர். அவரின் தொடர்ந்த முயற்சியால் இரண்டு முறை ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டும் ஏதோ சில காரணங்களால் மீண்டும் தாமதமாகிக் கொண்டே இருந்தது.
எனினும் மனம் தளராத தலைமை ஆசிரியர் மீண்டும் மூன்றாவது முறையாக ஆலோசனைக் கூட்டத்தைக்கூட்டினார். நான் அன்று காலை பாபாவின் முன் உட்கார்ந்து பிரார்த்தனை செய்த வண்ணம் இருந்தேன். உத்தரவு கொடுத்தால்தான் கூட்டத்திற்குச் செல்வேன். இந்தக் கூட்டம் கடைசிக் கூட்டமாக இருக்கவேண்டும். கூட்டத்தில் எந்த வித நெருக்கடியும் இல்லாமல் முடிவு எட்டப்பட்டு, பள்ளிக்கு இடம் தேர்வு செய்யப்பட வேண்டும். மேலும் இடம் வாங்குவதற்கு உண்டான வழி முறைகளையும் எனக்கு கோடிட்டு காட்ட வேண்டும் என வேண்டினேன்.
மேலும் மற்றொரு பிரார்த்தனையாக எனது மகனுக்குப் பார்த்துள்ள பெண் வீட்டார் மற்றும் இதர வகையறாக்கள் மூலம் ஏற்படும் முட்டுக்கட்டைகள், குழப்பமான சூழல்கள் அனைத்தும் இன்றே முடிவுக்கு வரவேண்டும். அப்போதுதான் என்னால் இயங்க முடியும் என வேண்டினேன். எனக்கு பாபாவிடமிருந்து சமிக்ஞை பூ மூலம் வந்தது. அதன் பிறகே கூட்டத்திற்குப் புறப்பட்டேன்.
இந்த முறை ஏற்கனவே வராதவர்கள் அதுவும் முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் வந்திருந்தனர். முடிவாய் இடமும் தேர்வு செய்யப்பட்டது.
எனது தம்பி தனது பங்களிப்பாக ஒரு லட்ச ரூபாயை உடனடியாகக் கொடுத்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அடுத்தடுத்து பிறரும் தங்களது பங்களிப்பை வழங்குவதற்காக உறுதி அளித்து அன்றே இடம் கொடுப்பவரிடம் ஒரு தொகையை கொடுத்து ஒப்புதல் பத்திரம் தயாராகிவிட்டது.
பாபாவால் இந்தக் காரியம் இனிதே நிறைவேறியது.
இதேபோல, எனது மகனுக்குப் பார்த்த பெண் வீட்டாரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். மற்ற பிரச்சினைகளும் சு்கமாக முடிவுக்கு வந்தன.
ஆண்டுக்கணக்காக இழுத்தடிக்கும் பிரச்சினைகளுக்கும் அடுத்தடுத்து பாபாவிடம் வேண்டினால் ஒவ்வொன்றாகத்தீர்ந்து போகும் என்பது எனது அனுபவ உண்மையாக இருக்கிறது.

                             சாயி கலியன், நங்கநல்லு}ர், சென்னை

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...