Sunday, September 15, 2013

சாயி பிரேரணா – பாகம் 4

சாயி பிரேரணா – பாகம் 4
(Translated into Tamil by Santhipriya)


பாகம் - 4 
நீ என்னுடைய கல்போன்ற கிரீடத்தின் முன் தலை குனிந்து நின்றால், உன்னுடைய பல்லாயிரக்கணக்கான பாபங்களை விலக்குவேன்
நீ சாயி பக்தன் ஆனால்,  பக்தி மார்கத்தின் பல வெள்ளங்களில் உன்னை மூழ்கடிப்பேன்
நீ என்னுடைய படத்தை உன் உடலில் அணிந்து இருந்தால் உன் உடல் முழுவதும் நான் வியாபித்து இருப்பேன்
நீ என்னைப்பற்றி புத்தகம் எழுதினால் அதை பிரபலமானதாக ஆக்குவேன்
சீரடியில் வந்து நின்று என் புகழ் பாடினால் உனக்கு அனைத்து நற்குணங்களும் நிறையும்
நீ பலமணி நேரம் நின்றுகொண்டு இருந்தபடி என்னை தரிசித்தால் , உன்னை அனைத்து புண்ணிய தீர்த்தங்களுக்கும் செல்ல வழி வகுப்பேன் அல்லது அனைத்து புண்ணிய தீர்த்த மகிமைகளை உனக்கு நான் அளிப்பேன்
நீ என் பாதுகைகளை வணங்கினால், உன்னை என்னுடைய முழு பக்தனாக ஏற்றுக்கொள்வேன்
நீ எனக்கு முன்னால் விளக்கு ஏற்றினால்,  உன் வாழ்வும் ஓளி மிக்கதாக ஆகும்
நீ என்னுடைய வழிபாட்டு தலத்திற்கு வந்து என்னை வணங்கினால், பல பக்தர்கள் அங்கு வந்து வணங்கியதற்கு சமம் ஆக்குவேன்
என்னை உன் வீட்டில் வைத்து வழிபட்டால் , உன்னுடைய அனைத்து வழிபாட்டிலும் என்னை நீ காணலாம் .
உனக்கு சீரடிக்கு வர மனது இருந்தால், மீண்டும் மீண்டும் ஷீரடிக்கு வர வழிப்பேன்
நீ என்மீது தூய பக்தி கொண்டு அன்பு செலுத்தினால், என்னுடைய முழு அன்பும் உனக்கு கிடைக்கும்
நீ என்னை உன்னுடையவனாக நினைத்தால் , என்னை உன்னுள் நீயே காண முடியும்


நன்றி:  http://forum.spiritualindia.org

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...