Saturday, September 14, 2013

சாயி பிரேரணா – பாகம் 3


சாயி பிரேரணா – பாகம் 3

(Translated into Tamil by Santhipriya)


நீ என்னிடம் வந்தால் உன் துயர் நீக்குவேன் , துன்பத்தைக் களைவேன்
நீ என்னுடைய புனித பூமியான ஷீரடியில் வாழ்ந்தால் , உன் வீட்டையும் புனித இடமாக்குவேன்
என் பிரசாதங்களை நீ பக்தியுடன் ஏற்றால்,  உன் நினைவுகளைத் தூய்மை ஆக்குவேன்
நீ என்னை பக்திபூர்வமாக வணங்கிவந்தால்,  உன்னை கர்மயோகியாக மாற்றுவேன்
எனக்கு நடக்கும் ஆரத்தியில் நீ சேர்ந்து பாடினால்,  உன் நாவில் சரஸ்வதியை வாசம் செய்ய வைப்பேன் .
என் வழியில் நீ நடந்தால் உனக்கு முன் நடந்து வழி காட்டுவேன்
எனக்காக நீ துன்பமுற்றோர்க்கு உதவினால்,  உன் இதயத்தில் ஆனந்தத்தையும்,  அமைதியையும் தருவேன்
என்னை உன் வீட்டில் நீ வைத்திருந்தால்,  உன் வீடு சொர்க்கம் போல ஆகும்
என்னுடைய உதி எனும் விபூதியை நீ நெற்றியில் தடவிக்கொண்டால்,  உன் முகமே தெய்வீகக் களை பெறும்
என்மீது நீ பூக்கள் பொழிந்தால்,  உன்னுள் நல்ல நினைவுகள் தோன்ற அருள் புரிவேன்
என் பாதங்களைத் தொட்டு வணங்கினால், உன்னை அனைவரும் விரும்புவனாக ஆக்குவேன்
என் பாதங்களைத் தொட்டு வணங்கினால், நான் உன்னுள் முழுமையாக வியாபித்து இருப்பேன்
சந்தனத்தை என் நெற்றியில் பொட்டாக வைத்தால், உன்னை அதிர்ஷ்டசாலியாக்குவேன்






No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...