Wednesday, March 19, 2014

இந்த ஆசையை பாபா நிறைவேற்றுவார்!

எனக்கு இருபத்தோறு வயதில் திருமணம் ஆனது. முதல் குழந்தை எட்டு மாதத்தில் இறந்தது. என்னுடைய இதயத்தில் இரண்டு வால்வுகளும் பழுதடைந்திருப்பதால், இனி ஒரு குழந்தையைத் தாங்கும் சக்தியிருக்காது, குழந்தை உண்டானால் உயிருக்கு ஆபத்து என்று சி.எம்.சி. டாக்டர்கள் கூறினார்கள்.
                அறுவை சிகிச்சைக்கு நாற்பது லட்சம் ஆகும் என்றும், ஐம்பது விழுக்காடு உறுதி அளிக்கமுடியாது என்றும் கூறினார்கள். மிகவும் கஷ்டப்பட்டேன்.
     வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது. 2007 ல் பாபாவை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. அழுது வேண்டியபோது, ஓர் அடியார் மூலம், உனக்கு பாபா துணையாக இருப்பார். நீ குழந்தையுடன் கோயிலுக்கு வருவாய் எனக் கூறினார். பாபா மீது பாரத்தை வைத்தேன், கர்ப்பமானேன்.
     டாக்டர்கள் என்னவெல்லாமோ கூறினார்கள்.எதற்கும் பயப்படவில்லை. எல்லாம் பாபாவின் செயல் என தைரியத்துடன் இருந்தேன். நவம்பர் 5, 2007 ல் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த அற்புதம் பாபாவால் மட்டுமே முடியும்.
                2011 ல் எனக்கு இன்னொரு ஆண் குழந்தையும் பிறந்தது. டாக்டர்கள் இதற்கு, நான் உயிருடன் இருப்பது சாத்தியமல்ல என்று கூறினார்கள். ஆனால் பாபா என்னுடன் இருப்பதால் எல்லாமே சாத்தியமாயிற்று. என் இரு குழந்தைகளும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர். அவர்களுக்கு சாயி பாபா என்றால் மிகவும் பிடிக்கும்.
                நான் இதுவரை அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை. இனி செய்யவும் விருப்பம் கிடையாது. இதுவரை என்னை வழி நடத்திய பாபா இனியும் என்னை நலமுடன் காப்பாற்றுவார்.  எனக்கு வரும் வியாதிகளுக்கு, வலிகளுக்கு அவரின் உதியே எனக்கு மருந்து.
     வியாழக்கிழமை விரதம் இருப்பேன். தினமும் அவருக்கு பால் வைத்து வணங்கி விடடுத்தான் மற்ற வேலைகளைச் செய்வேன். புதுப்பெருங்களத்தூர் வரவேண்டும், சாயி வரதராஜனை தரிசனம் செய்ய வேண்டும், சீரடி செல்லவேண்டும் என்ற ஆவல். இந்த ஆசையை பாபா நிறைவேற்றுவார் என நம்புகிறேன்.


கே.பரிமளா

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...