Saturday, March 22, 2014

கடைசிப் புகலிடம் பாபாவே!

பீமாஜி பாடீல் பல வியாதிகளாலும், நெஞ்சு வலியாலும் துன்பப்பட்டார். அது கடைசியில் காசநோயாக மாறியது. சிகிச்சை பெற்றும் பலனில்லாமல் மரணத்தை நோக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் மனதிற்குள்தான் வாழவேண்டும் என்று, கடவுளிடம் பிரார்த்தனை செய்தார். நானா சாகேப் சாந்தோர்க்கரை கலந்தாலோசித்து என்ன செய்யலாம் எனக் கேட்டிருந்தார்.
     பாபாவின் பாதங்களைப் பணிந்து உதவி பெறுவதே ஒரே வழி என்று சாந்தோர்க்கர் கூறினார். இதையடுத்து பீமாஜியை தூக்கிவந்து பாபாவின் திருமுன்னர் வைத்தனர். முன்னைய தீய கருமங்களாலேயே இவ்வியாதி என்று பாபா சுட்டிக் காண்பித்து முதலில் இதில் தலையிட தீர்மானம் இல்லாதவராக இருந்தார்.
     நோயாளியோ தாம் அனாதரவானவர் என்றும், அவரையே சரணாகதி அடைந்திருப்பதாகவும், அவர்தாம் தனது கடைசி கதி என்றும் கூறி அலறத் தொடங்கினார்.
     அபபோது பாபாவின் உள்ளம் உருகியது. பாபா பீமாஜி பாட்டிலை குணப்படுத்தினார். அதாவது அவரது கர்மாவின் தளையிலிருந்து விடுதலையாக்கினார். இந்த பீமாஜி பாடீல் தான் சாயிசத்ய விரத பூiஜயை சத்ய நாராயண பூஜைக்குப் பதிலாக உருவாக்கி முதலில் செய்தவர்.



சாயி சத்சரிதம் 13 ம் அத்தியாயம்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...