Thursday, March 6, 2014

பக்தர்கள் கவனத்திற்க்கு

பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் தினந்தோறும் காலையில் திறக்கப்படுகிறது. பன்னிரண்டு மணிக்கு ஆரத்தி முடிந்த பிறகு நடை சார்த்தப்படுகிறது. மாலையில் தினமும் நாலரை மணிக்குத் திறக்கப்பட்டு எட்டு மணி ஆரத்தி முடிந்த பிறகு நடை சார்த்தப்படுகிறது.
இந்த நேரங்களில் யார் வேண்டுமானாலும் வந்து பாபாவை விருப்பம் போல வழிபடலாம். மேல் மாடி தியானத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. வருகிற பக்தர்கள் அமைதியாக அமர்ந்து வேண்டுதல் செய்யலாம், தியானம் செய்யலாம், பாபாவின் நாம சங்கீர்த்தனம் செய்யலாம்.
சாயி வரதராஜனை எதிர்பார்த்து வருவதை தவிர்க்குமாறு வேண்டுகிறோம். சாயி பாபா மட்டுமே இங்கு அற்புதங்களைச் செய்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பாபாவை நம்பி இங்கு வந்த பக்தர்கள் இதுவரை வீணானதில்லை. எனவே, பாபாவை மட்டும் நம்பி வாருங்கள், சாயி வரதராஜன் இருந்தால் அவரிடம் பிரார்த்தனை செய்துகொள்ளலாம்.

கூட்டுப் பிரார்த்தனைக்கான கடிதங்களை உண்டியலில் சேர்க்காமல் பாபாவின் திருவடிகளில் அல்லது மையத்தின் மேலாளர் திரு. பாஸ்கரன் அவர்களிடம் சேர்ப்பிக்குமாறு வேண்டுகிறோம். கூடுமானவரை வியாழக்கிழமைகளில் பாபாவுக்கு பூக்கள் வாங்கி பணத்தை விரையம் செய்வதற்கு பதில், பிஸ்கெட், இனிப்புகள் போன்றவற்றை வாங்கி நைவேத்தியம் செய்து வைத்தால், அவற்றை முதியோர் இல்லங்களுக்கும், அனாதை விடுதிகளுக்கும் சேர்ப்பித்து மற்றவர்களுக்கு உணவளித்த புண்ணியத்தைச் சேர்க்கலாம். 

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...