Friday, March 7, 2014

பொறுமையுடன் காத்திரு!

இவனது இது சாதாரண மசூதி அன்று. _ கிருஷ்ணனின் துவாரகை. இந்த மசூதியில் கால் எடுத்து வைத்தவர் உடனே சேமத்தையும், ஆரோக்கியத்தையும் திரும்பப் பெறுகிறார். நீங்களே இதை அனுபவத்தில் காண்பீர்கள். இங்கு வந்தவர் நிவாரணம் பெறவில்லை என்பது, சென்ற காலம்,நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங் களிலும் நடக்காத விக்ஷயம். உங்களுடைய காரியம் கைகூடும் என்பதை அறிவீர்களாக

     நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த மாலே காங்வ் என்ற ஊரைச்சேர்ந்த டாக்டர் முல்கி என்பவரின் அண்ணன் மகன், விலா எலும்பில் புரையோடிப் போயிருந்த ரணத்தோடு இருந்தான். முல்கி மிகப் பெரிய அறுவை சிகிச்சை மருத்துவராக இருந்தும், அவனை காப்பாற்ற இயலாத நிலையில் இருந்தார்.
     சிகிச்சைகளும், தெய்வ வழிபாடுகளும் பலன் தராத நிலையில் செய்வது அறியாமல் திகைத்துக் கொண்டி ருந்தார்கள். அந்த நேரத்தில் சீரடியில் ஒரு முஸ்லிம் மகான் இருக்கிறார். அவருடைய தரிசனம் ஒன்றே வியாதிகளை நிவர்த்தியாக்குகிறது. அவரது கையால் உதீ தடவினால், தீராத கொடிய வியாதிகளும் குணமடைகின்றன என்று டாக்டர் கேள்விப்பட்டார்.
     இதை தன் அண்ணன் குடும்பத்தில் சொன்ன போது, அவர்கள், “பாபாவின் பாதங்களை வணங்குவதற்காகப் போவோம். இந்த கடைசி முயற்சியையும் செய்து பார்த்து விடுவோம். இந்த வழியிலாவது அபாயம் விலகட்டும்! என்று பேசி முடிவெடுத்து, சீரடிக்கு வந்தார்கள்.
     பிள்ளையைப் பெற்றவர்கள் பாபாவைப் பார்த்ததும் துக்கத்தால் மனம் உடைந்து கதறினார்கள். “ஓ சமர்த்த சாயி! எங்கள் மகன் படும் வேதனையையும், அனுபவிக்கிற துக்கத்தையும் பார்க்க சகிக்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்றும் தெரியவில்லை. நாங்கள் இவனுக்கு பலவித சிகிச்சை செய்து களைத்து விட்டோம். உங்கள் மகிமை யைக் கேள்விப்பட்டு இவ்வளவு தூரம் பயணித்து இங்கு வந்திருக்கிறோம். முழுமையாக உங்களை சரணடைகிறோம். உங்கள் அருட்கரத்தை இவன் தலைமேல் வைத்து, இவன் வியாதியைப் போக்குங்கள். உயிரை தானமாக எங்களுக்குக் கொடுங்கள்என்று வேண்டினார்கள்.
      பக்தன் அழுதால் தாங்காத கருணை உள்ளம் படைத்தவரான சாயிநாதன், அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்! “இந்த மசூதியில் அடைக்கலம் புகுந்தவர்கள் என்றுமே துர்க்கதி என்கிற கெடுநிலையை யுகம் முடியும் வரை அடையமாட்டார்கள்!
     இப்பொழுது நீங்கள் கவலையை விடுங்கள். இந்த உதீயை எடுத்துச் சென்று காயத்தின் மீது தடவுங்கள். எட்டு நாட்களுக்குள் குணம் தெரியும். இறைவனிடம் நம்பிக்கை வையுங்கள்.
     இது சாதாரண மசூதி அன்று. கிருஷ்ணனின் துவாரகை. இந்த மசூதியில் கால் எடுத்து வைத்தவர் உடனே சேமத்தையும், ஆரோக்கியத்தையும் திரும்பப் பெறுகிறார். நீங்களே இதை அனுபவத்தில் காண்பீர்கள். இங்கு வந்தவர் நிவாரணம் பெறவில்லை என்பது, சென்ற காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங் களிலும் நடக்காத விக்ஷயம். உங்களுடைய காரியம் கைகூடும் என்பதை அறிவீர்களாக என்று வாக்குறுதி அளித்தார்.
     பையனை தன் எதிரில் உட்கார வைக்கச்சொன்னார். அவனது தலையை அன்போடு வருடிக் கொடுத்தார். அவனுடைய கால்களை தடவி விட்டார். அன்போடு பார்த்தார். சாயி தரிசனம் பையனின் உடலில் மாற்றத்தை உண்டாக்கியது. அவர் தந்த உதி எட்டு நாட்களில் கொடிய காயத்தை ஆற்றியது.
     அவர்கள் நான்கு நாட்கள் சீரடியில் தங்கி பாபாவை தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிச் சென்றார்கள். எப்படிப்பட்ட நோயையும் உதி குணமாக்கி விடும் அற்புதம் பாபாவின் அருட்பார்வைக்கு உண்டு.

     உங்களில் யாரேனும் இப்படிப்பட்ட நோய்கள், கடன் பிரச்சினை, வேறு வித இடையூறுகளால் பாதிக்கப் படும்போது சமர்த்த சாயியிடம் முழு நம்பிக்கையுடன் மனதால் சரணடைந்து விடுங்கள். பக்தர்களைக் காக்கும் பரம தயாளரான பாபா காப்பாற்றுவார். பதில் வரும்வரை பொறுமையோடு காத்திருங்கள். அவசரத்தில் புத்தி தடுமாறி தவறு செய்யாதீர்கள்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...